India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெள்ளாளவிடுதி ஊராட்சியில் குடிநீர் வராததை கண்டித்து நேற்று கறம்பக்குடி- கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இலுப்பூர் மேலப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகளுக்கு நேற்று மேலப்பட்டி அம்மன் கோவில் அருகே உள்ள சமுதாய கூடத்தில் காதணி விழா நடத்தியுள்ளார். இதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ராமர், சூர்யா, முத்துசெல்வி, பாண்டியம்மாள் ஆகிய 4 பேரும் மொய் எழுதுபவரை திசை திருப்பி பணத்தை கையாடல் செய்தனர்.இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று இந்தியா கூட்டணி சார்பில் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவாலின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல்ஜப்பார் , காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன், மாநில சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் இப்ராஹிம்பாபு , நகர்மன்ற உறுப்பினர் ராஜாமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கி. முதலிப்பட்டி ஊராட்சி உள்ளது. இங்குள்ள அரசு நடுநிலை பள்ளியில் நேற்று மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் சேர்ப்போம் சேர்ப்போம், அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளை சேர்ப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில்
500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம் அதேபோல் நேற்று முன்தினம் வழக்கம் போல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு நேற்று கரைத்திரும்பினர் . அப்போது கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் வலையில் 2,500 கிலோ காலா மீன்கள் சிக்கியிருந்தது.
ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்யா. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து இருந்து வந்த நிலையில், நேற்று மேலநெம்மக்கோட்டையில்
உள்ள கிணற்றில் சத்யா குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சத்தியாவை உயிருடன் மீட்டனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை
புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்திலுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பு வைப்பறையில் நேற்று மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் கருவி (விவிபேட்) ஒதுக்கீடு செய்து பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பூ திருவிழா மற்றும் அக்னி பால்குட திருவிழாவை முன்னிட்டு கொன்னைப்பட்டி கொன்னை கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு கண்மாயில் இறங்கி ஊத்தா தூரி கச்சா இவைகளை பயன்படுத்தி மீன்களைப் பிடித்துச் சென்றனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி புதுகையில் உள்ள திருமண மண்டபங்களில் உரிமையாளா்கள் மற்றும் அடகுக்கடை நடத்துவோருடன் மாவட்ட தோ்தல் அலுவலா் ஐ.சா.மொ்சி ரம்யா நேற்று ஆலோசனை நடத்தினாா். தோ்தல் நடத்தை விதிகள் குறித்து அவா் அப்போது பேசியது, திருமண மண்டபங்களில் அரசியல் சாா்ந்த நிகழ்ச்சிகளுக்கு தோ்தல் அலுவலா்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கறம்பக்குடி தாலுக்கா குழந்திரான்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையா, இவர் தற்போது புதுக்கோட்டை நகரில் வசித்து வருகிறார். கருப்பையா அரசு ஒப்பந்ததாரராக அதிமுக ஆட்சி காலத்தில் உருவெடுத்து தற்போது அரசு பணிகளில் ஒப்பந்தம் மூலம் பணிகள் செய்து வருகிறார். தற்போது அதிமுக சார்பில் இன்று திருச்சி திருச்சி மக்களவைத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.