Pudukkottai

News May 3, 2024

புதுக்கோட்டையில் எவ்வளவு வெயிலா ?

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைகாலம் ஆரம்பமான முதலே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்த நிலையில், மக்கள் நாள்தோறும் வெயிலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 107.6 டிகிரி செல்சியஸ் அடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் வியாபாரம் இல்லாமலும் . மாலை வேலைகளில் மக்கள் அதிகமாக வருவதாகவும் பணிச்சுமை அதிகமாவதாக தெரிவிக்கின்றனர்.

News May 3, 2024

ஆலங்குடி அருகே தீயில் கருகிய சிறுமி: போலிஸ் விசாரணை

image

ஆலங்குடி அருகே கீழப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல்(53). டாஸ்மாக் மேற்பார்வையாளர். இவரது மனைவி இந்திராணி. இவர்களது மகள் ராஜலெட்சுமி(17). சம்பவத்தன்று பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியது. அருகிலிருந்தவர்கள் சென்று பார்த்தபோது ராஜலெட்சுமி உடல்கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த சம்பட்டி விடுதி போலிஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 3, 2024

புதுகை: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து, துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. அருகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

News May 3, 2024

புதுகை: திமுக தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே அமரடக்கியில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி தலைவர் பழனியப்பன் கோடைக்கால தண்ணீர் பந்தல் அமைத்து இருந்தார். இந்த நிலையில் தண்ணீர் பந்தலை சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 3, 2024

ஆலங்குடி அருகே பார் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

image

மேலாத்தூரை சேர்ந்தவர் ரமேஷ் இவர் அப்பகுதியில் உள்ள பாரில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் ஆலங்குடியை சேர்ந்த இளமாறன் என்கிற சிவா, அஸ்வின் உள்பட சிலர் கடந்த 28 ஆம் தேதி பாரில் பணி புரிந்து கொண்டு இருந்த ரமேஷை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நேற்று ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து சிவா, அஸ்வின் ஆகியோரை கைது செய்தனர்.

News May 3, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து

image

ஆலங்குடியில் இருந்து கல்லாலங்குடி முத்து மாரியம்மன் கோவில் வழியாக நேற்று சரக்குவேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 3, 2024

ரோட்டரி சங்கங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

image

புதுக்கோட்டையில் மாவட்டத்திலுள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்கத்தலைவர் அசோகன் தலைமை வகித்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு விருதுகளை வழங்கி பேசினார். இதில் புதுகை எம்எல்ஏ முத்துராஜா, நகர்மன்றத்தலைவர் திலகவதி, துணைத்தலைவர் லியாகத்அலி, ரோட்டரி மாவட்ட ஆளுனர் சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

News May 2, 2024

புதுகை: சூடு பிடிக்கும் நுங்கு விற்பனை

image

முக்கண்ணாமலைப்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர் இந்த நிலையில் வெப்பத்தை தணித்துக்கொள்ள தண்ணீரையும், நிழல் தரும் மரங்களையும் தேடிச்செல்ல வேண்டிய நிலையில் இன்று முக்கண்ணாமலைப்பட்டியில் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. சாலை ஓரங்களில் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது.

News May 2, 2024

புதுகை அருகே மீன்பிடி திருவிழா

image

பொன்னமராவதி
அருகே உள்ள கொப்பனாங்கண்மாயில் மழை பெய்யவும், விவசாயம் தழைக்க வேண்டியும் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான விரால், சிலேபி, அயிரை, கெண்டை ஆகிய மீன்கள் கிடைத்தன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News May 2, 2024

புதுக்கோட்டை அருகே மீன் விலை உயர்வு

image

மணமேல்குடி மீன் மார்க்கெட்டுக்கு தினசரி மீன்கள் இறால்கள் நண்டுகள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்க வியாபாரிகளும் அசைவ பிரியர்கள் மார்க்கெட்டுக்கு வருகின்றனர் தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். நேற்று அனைத்துவகை மீன்களும் கூறு போட்டு வியாபாரிகள் விற்பனை செய்தனர்

error: Content is protected !!