Pudukkottai

News June 25, 2024

புதுக்கோட்டை மாவட்ட எம்.பி-கள் இன்று பதவியேற்பு

image

புதுக்கோட்டை மாவட்ட வெற்றி வேட்பாளர்களான காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி ,மதிமுக கட்சியை சேர்ந்த துரை வைகோ, இந்திய முஸ்லீக் கட்சி நவாஸ் கனி ,ஆகியோர் இன்று நாடாளுமன்ற எம்.பி-களாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

News June 25, 2024

போராட்டத்துக்கு பானைகளுடன் வந்திருந்த அதிமுக மகளிரணி

image

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம், மாவட்டக் காவல்துறை என அனைவருக்கும் பங்கு உண்டு. தமிழக அரசின் தோல்லியால் தான் இது நடந்துள்ளது.மேலும் விசாரணைக்கு முதல்வா் ஸ்டாலின் தயங்குவது ஏன்? மற்றும் மூன்று மாநில எல்லைகள் தொடா்புள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்.

News June 25, 2024

முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை(ஜூன் 26) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் குறைகள் குறித்த மனுக்களை ஆட்சியரிடம் நேரடியாக வழங்கலாம் எனவும், அன்றைய தினம் மாலை 3:30 மணியளவில் நேரில் ஆஜராகி மனுக்களை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல் தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

புதுக்கோட்டையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள்குறை
தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று(ஜூன் 24) மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் 13 ஒன்றியங்களில், பொதுமக்களிடமிருந்து 629 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ரம்யா தேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News June 24, 2024

சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு பரிசு

image

புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (24-06-2024) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவையில் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோருக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.இந்த நிகழ்வில் தரக்கட்டுப்பாடு மேலாளர் பாரதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News June 24, 2024

புதுகை: புதிய வாகனங்கள் கலெக்டர் வழங்கல்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட புதிய அலுவலக வாகனங்களை ஓட்டுநர்களிடம் ஒப்படைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News June 24, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் இன்று (24-06-2024) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வழங்கினார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு ரம்யா தேவி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News June 24, 2024

புதுகை: ரூ.25,000 வழங்கிய ஆட்சியர்!

image

புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (24.06.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தாட்கோ சார்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், இயற்கை மரண உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.25,000/- க்கான காசோலையினை, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வழங்கினார்.

News June 24, 2024

அறந்தாங்கி: தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரத்தில் தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில், இன்று(ஜூன் 24) தேரில் கும்பம் ஏற்றும் பணிகள் நடைபெற்றபோது கயிறு அறுந்து ஏற்பட்ட விபத்தில் மகாலிங்கம்(60) என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News June 24, 2024

புதுக்கோட்டை அருகே சிலை உடைப்பு

image

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள சிலை பல துண்டுகளாக நேற்று (ஜூன் 23) உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆஞ்சநேயர் சிலையை உடைத்த மர்ம நபர்கள் குறித்து புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!