India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு, தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 20ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. www.tnprivatejobs.tn.gov.in செய்ய புதுக்கோட்டை ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE செய்யவும்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஆண்டு வருமானம் உயர்த்தப்பட்டுள்ளது. சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களில் பயனுடைய குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ 72,000 லிருந்து 1,20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாங்குடியை சேர்ந்தவர் சின்னபொண்ணு. இவரது உறவினர் ஆறுமுகம் சின்னபொண்ணு வீட்டில் இருந்த கல்லுக்காளை உடைத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட சின்னபொண்ணுவை ஆறுமுகம், கணபதி மற்றொரு ஆறுமுகம் ஆகிய 3 பேரும் அடித்ததாக கூறப்படுகிறது. சின்னபொண்ணு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

புதுகையில் வரும் 24ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், டிச.26, 28 ஆகிய 2 நாட்கள் வினாடி வினா போட்டியும் புதுகை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும். ஒப்புவித்தல் போட்டிக்கு 10 வயதும், மற்ற போட்டிகளில் அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும், பெயர் பதிவுக்கு புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் 9965748300 தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா தலைமையில், புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் டிச.18 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயனடைந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் சாலை ஆண்டவர்கள் மெய்மதத்தினர் உள்ளனர். இவர்களுக்கு தனி வழிபாடு முறை, வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். மெய்வழிச்சாலையில் நேற்று கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலை பெளர்ணமி கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து சபைக்கரசர் சாலை வர்க்கவான் கார்த்திகை மகா தீபம் ஏற்றி கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி நாளை(டிசம்பர்.15) ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால் நாளை மறுநாள் (டிசம்பர்.17) திங்கட்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கன மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-2024 ஆம் ஆண்டில் மின் மோட்டார் உடன் கூடிய தைலி இயந்திரம் ரூ.35.33 லட்சம் மதிப்பீட்டில் 283 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் கீரனூரில் அரசினர் தொழிற்பயிற்சி 2024 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கீரனூரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 31.12.2024 வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தேசிய கால்நடை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆறாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி டிசம்பர் 16ஆம் தேதி முதல் தொடங்கி ஜன.20ஆம் தேதி வரை அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. கால்நடை வளர்ப்பு முகாம் நடைபெறும் இடத்திற்கு தங்கள் கால்நடைகளை தவறாமல் கொண்டு சென்று தடுப்பூசி போட்டு பயன்பெற மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.