Pudukkottai

News August 5, 2024

புதுக்கோட்டையில் ஓர் அதிசய கிராமம்

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வாடிமனைப்பட்டி கிராமம். பெயர் வாடிமனைப்பட்டி, ஆனால், “சைவ கிராமம்” என்றுதான் அனைவராலும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள 45 குடும்பங்களும் வள்ளலாரின் சுத்த சமரச சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடிக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக இந்த கிராமத்தினர் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. திருமணங்களில் ஹோமங்கள், மந்திரங்கள் போன்ற சடங்குகளுக்கு இடமில்லை. SHARE IT

News August 5, 2024

நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை “மக்களுடன் முதல்வர் திட்டத்தின்” கீழ் குன்றாண்டார் கோவில் ஊராட்சி உடையாளிபட்டி, கொப்பம்பட்டி, பாப்பநாயக்கன்பட்டி, உடையாளிப்பட்டி, ராவுத்தன்பட்டி, கில்லூகோட்டை ஆகிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News August 4, 2024

புதுக்கோட்டையில் நாளை தொடக்கம்

image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ரூ.41 லட்சம் மதிப்பில் பொதுமக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாளை தொடக்கி வைக்கிறார். அதற்கான விரிவான ஏற்பாடுகளை திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமையில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மாவட்ட ஆட்சியர் அருணா ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

News August 4, 2024

வாராப்பூரில் பரிசு வழங்கிய அமைச்சர்

image

வாராப்பூர் அடுத்த கீழப்புலவன்காடு கிராமத்தில் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் 45வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு இளைஞரணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி இணைந்து நடத்தும் மாபெரும் கபாடி போட்டியின் இறுதி போட்டியை இன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

News August 4, 2024

மீனவர்கள் கைது – ஜி.கே.வாசன் கண்டனம்

image

புதுக்கோட்டையில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கண்டிப்புடன் இலங்கை அரசுடன் பேசி, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

News August 4, 2024

புதுகை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை,தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, மணமேல்குடி, ஆலங்குடி, திருமயம், பொன்னமராவதி உள்ளிட்ட பிற பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது.

News August 4, 2024

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” போஸ்டரால் பரபரப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை பகுதியில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய பதாகைகளுடன் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற வாசகத்துடன் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. புதுக்கோட்டை நகரின் முக்கிய பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 4, 2024

ஜூலை மாதம் ரேஷனில் பொருள் வாங்கலையா

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, புதுக்கோட்டையில் உள்ள 4,90,069 அட்டை தாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.

News August 4, 2024

நட்புனா என்னனு தெரியுமா

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

News August 4, 2024

இளைஞர் அடித்து கொலையா?

image

புதுகை கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (20). இவர், ஆத்தங்கரைவிடுதியை சேர்ந்த மைக்செட் உரிமையாளர் சரவணகுமார் என்பவரது வீட்டில் கடந்த 17 நாட்களாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது கையில் பிளேடால் அறுத்த ரத்த காயம் இருந்ததை கண்ட போலீசார் இளைஞர் அடித்து கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!