Pondicherry

News May 5, 2024

பாண்டி “ராக் பீச்” பகலில் வெறிச்சோடி

image

அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. புதுவையில் முதல் நாளிலேயே 100.4 டிகிரி வெயில் பதிவானது. வார இறுதி விடுமுறையை புதுவையில் கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளும் தங்கும் விடுதிகளில் முடங்கி இருந்தனர். மாலை 5 மணிக்கு பின்னரே அவர்கள் வெளியில் வரத் தொடங்கினார்கள். இதன் காரணமாக புதுவை கடற்கரை, பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள், மக்கள் கூட்டம் அலைமோதியது.

News May 5, 2024

புதுச்சேரியில் புதிதாக உருவாகும் ஈபிள் டவர்

image

புதுவை பாண்டி மெரினாவிலும் தற்போது ‘ஈபிள் டவர்’ அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுமார் 55 அடி உயரத்தில் ஈபிள் டவர் இரும்பினால் அமைக்கப்படுகிறது. இதற்காக 5 அடி உயரம் கொண்ட பீடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ‘கேக்’ வெட்டி கொண்டாடுவதற்கு வசதிகளும் செய்யப்பட உள்ளது. இதற்காக சிறிய தொகை கட்டணமாக வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News May 5, 2024

புதுச்சேரியில் பிரபல நட்சத்திரங்கள் கிரிக்கெட் போட்டி

image

புதுச்சேரியில் கோடை விடுமுறையை முன்னிட்டு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற பொழுது போக்கு ஒரு நாள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துத்திப்பட்டு சி.ஏ.பி. சீக்கெம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களான ம.க.ப. ஆனந்த், தங்கதுரை, புகழ் மற்றும் பிரபலமான யூடியூப்பர்ஸ் பங்கேற்றனர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

News May 4, 2024

ராணுவ வீரருக்கு ஆளுநர் அஞ்சலி

image

புதுவை துணைநிலை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இன்று  அறிக்கையில், நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் தனது உயிரை இழந்த ராணுவ வீரருக்கு எனது சார்பாகவும் புதுச்சேரி மக்கள் சார்பாகவும், வீரவணக்கமும் அஞ்சலியும் செலுத்துகிறேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறப்பட்டுள்ளது.

News May 4, 2024

கோடை வகுப்புகளில் 1000 மாணவர்கள் சேர்க்கை

image

புதுவை ஜவகர் பால்பவன் கோடை வகுப்புகளில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்தனர்.
இந்தாண்டு அரசு பள்ளிகளின் விடுமுறை காலம் மே முதல் தேதி இருந்து துவங்கியதால், கோடை கொண்டாட்ட வகுப்புகள் நேற்று முதல் துவங்கி 30 நாட்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. நேற்று காலை ஐந்து இடங்களில் சேர்க்கை நடந்தது. இதனால் பால்பவனில் பெற்றோர்கள் கூட்டம் அலை மோதியது.

News May 4, 2024

திரௌபதி அம்மன் ஆலய தீமிதி விழா

image

மணவெளி பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பஞ்சபாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த தருணம். மேலும் இந்த தீமிதி திருவிழாவில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News May 3, 2024

புதுவையில் இன்று 100 டிகிரி வெயில்

image

புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பகலில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. கடற்கரைகள், சாலைகள் மற்றும் பேருந்து நிலையம், சந்தைப் பகுதிகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை மைய வட்டாரங்கள் சார்பில் தெரிவித்துள்ளது.

News May 3, 2024

புதுச்சேரி: முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு

image

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மீன்பிடி தடைக்காலத்திற்கு ரூ.8000 மழைக்கால நிவாரண உதவியாக ரூ.6000 என ஒவ்வொரு மீனவர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் புதுவையில் தமிழகத்தை விட குறைந்த மானிய உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் போல் இங்கும் மானிய உதவி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை மனு கொடுத்தார்.

News May 3, 2024

புதுச்சேரி: மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

image

சென்னையில் உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சையின் போது உயிர் இழந்த புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஹேம சந்திரன் மறைவிற்கு காரணமான மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசிற்கு புதுச்சேரி அரசின் சார்பில் வலியுறுத்த கோரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் மற்றும் இளைஞர் குடும்பத்தினர் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

News May 3, 2024

புதுச்சேரியின் உள்ள ஸ்ரீ ஆரபிந்தோ ஆசிரமம்

image

ஸ்ரீ அரபிந்தோ அசிரமம் ஒரு ஆன்மீக மையமாகும். அரசியல், பத்திரிக்கையாளராக இருந்த அரவிந்தர் 1920 ஆம் ஆண்டில் புதுச்சேரிக்கு வந்து ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1926 ஆல் அவரின் ஆசிரமம் உருவாக்கப்பட்டு, 1934 இல் பெரிதாக வளர்ச்சியைக் கண்டது. இந்த ஆசிரமத்தில் 400 க்கும் மேற்பட்ட கட்டடங்களில் பக்தர்கள் வாழ்கின்றனர். தற்போது சுற்றுலா பயணிகளும் ஆன்மீகவாதிகளும் இவ்விடத்திற்கு வந்து செல்கின்றனர்.

error: Content is protected !!