India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி அரசு நிதித்துறை செயலர் சிவக்குமார் பிறப்பித்த உத்தரவில் புதுச்சேரி மாநில அரசுத்துறைகளில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரை ஜனவரி 1.2024 முதல் முன் தேதியிட்டு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக 46 சதவீதத்தில் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் Research Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.இதற்கு MA / M.Phil./ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த <
புதுவை தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியை கட்டாயம் பாா்க்க வேண்டிய இடமாக மத்திய அரசின் சுற்றுலாத் துறை அங்கீகரித்து உள்ளதாக கல்லூரி முதல்வா் சசிகாந்ததாஸ் நேற்று தெரிவித்தார். கல்லூரி வளாகத்தில் பசுமை புதுச்சேரி எனும் பொருளில் நகா்ப்புற காடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், 110- க்கும் மேற்பட்ட உயிரினங்கள், 7, 000 தாவரங்கள், மயில் உள்ளிட்ட 25 வகை பறவைகள், 30 வகை பட்டாம் பூச்சிகள் உள்ளன.
புதுவை மாநில விளையாட்டுத் துறை & இளைஞா் நல இயக்குநரகம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில தடகளப் போட்டி புதுவை கோரிமேடு ஆயுதப் படையில் நேற்று காலை தொடங்கியது. இன்று (மே.15) 200 மீட்டா்,600 மீ. ஓட்டம், 100 மீ. தொடா் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், டிரிபிள் ஜம்ப், ஈட்டி எறிதல் போட்டிகள் நடைபெறுகிறது.
நெல்லிதோப்பு தொகுதிக்குட்பட்ட சுப்ரமணி கோயில் வீதியில் இன்று அதே பகுதியை சேர்ந்த கர்த்திகேயன், வேல்முருகன் நகரை சேர்ந்த சிவா, டான் பஹதூர், கண்ணன், உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்டவர்களை தெருநாய் கடித்துள்ளது. காயமடைந்தவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். தெருநாய்களை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காரைக்கால் கடற்கரை பகுதியில் 2 பெரிய ராட்சத ராட்டினங்கள் உரிய பாதுகாப்பு இன்றி அதிக உயரத்துக்கு சுற்றி வருவதாக சுற்றுலா பயணிகளிடம் இருந்து தொடர் புகார் வந்தன. இதையடுத்து நகராட்சி ஆணையர் சத்யா ராட்டினத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது உரிய தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டது தெரிய வந்தது. உரிய பாதுகாப்பு சான்றிதழ் இன்றி இயக்கப்பட்ட ராட்டினங்கள் இயக்க தடை விதித்து நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
புதுவையில் இணைய வழி குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நேற்று சைபர் கிரைம் போலீசார் 1930 என்ற உதவி மைய எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த எண்ணை தொடர்பு கொண்டவுடன் நேரடியாக சைபர் கிரைம் போலீஸ்க்கு இணைப்பு செல்லும்.24 மணி நேரமும் இந்த எண்ணில் வரும் புகார்களை விசாரிக்க முதலில் திட்டமிட்டு இதற்கான பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு 3 ஆம் நபர் காப்பீடு செய்யாவிட்டால் ரூபாய் 4,000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை துணை ஆணையர் குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மூன்றாம் நபர் காப்பீடு செய்து வாகனங்களை இயக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
புதுச்சேரி ஜாலி பிரிண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் முதலாம் ஆண்டு கோடை பயிற்சி முகாம் நிறைவு விழா இந்திரா நகர் பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி அரசு கொறடாவும் இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் கலந்துகொண்டு பயிற்சி முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
புதுவை, காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குதல் இன்று தொடங்கியது. 24ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களின் தகுதிபட்டியல், நேர்காணலுக்கான தேதி அந்தந்த அரசு மேல்நிலை பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். 31 ஆம் தேதி மதிப்பெண் இடஒதுக்கீடு முறையில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் இடம் வழங்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.