Pondicherry

News May 21, 2024

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

image

புதுச்சேரியில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

புதுச்சேரியில் அரை கம்பத்தில் பறந்த தேசிய கொடி

image

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி அந்நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியில் ஈரான் அதிபர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று சட்டசபை, தலைமைச்செயலகம் ,ஆளுநர் மாளிகை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலங்களிலும் உள்ள தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

News May 21, 2024

நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

புதுவை மாநிலத்தில் நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க சென்டாக் அமைப்பு உள்ளது. மாணவர்கள் இணையதளம் வாயிலாக சென்டாக்கிற்கு கடந்த 14ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனா். இதற்கான கடைசி தேதி மே 22 என கூறப்பட்டது. ஆனால், நீட் தோ்வு முடிவு உள்ளிட்டவை காரணமாக விண்ணப்ப கால அவகாசத்தை நீடித்து மே 31ஆம் தேதி வரை இணையதளம் மூலம் சென்டாக் அமைப்புக்கு விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News May 21, 2024

புதுவை காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

image

புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையிலான குழுவினர் திடக்கழிவு மேலாண்மை, சாலையோர ஆக்கிரமிப்பு குறித்து நேற்று அதிரடியாக காந்தி வீதியில் ஆய்வு நடத்தினர். இதுகுறித்து பேசிய புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, காந்தி வீதியில் 22ம் தேதி மீண்டும் ஆய்வு நடத்தப்படும். சாலை ஆக்கிரமிப்பு, நடைபாதை ஆக்கிரமிப்பு இருந்தால் அபராதம் விதிக்கப்படுவதோடு , கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

News May 21, 2024

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை நரசிம்ம ஜெயந்தி விழா

image

புதுவை முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை நரசிம்ம ஜெயந்தி விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, காலை 10 மணிக்கு 11 நரசிம்மர் உற்சவர்களுக்கு பால் தயிர், இளநீர் போன்ற மங்கள திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 7 மணியளவில், 11 நரசிம்மர்களும் தேரில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.

News May 20, 2024

புதுச்சேரி: 27 ஆண்டுகள் சிறை தண்டனை

image

புதுச்சேரியில் போக்சோ வழக்கில் தனியார் பேருந்து நடத்துநர் பாபு என்பருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் இன்று (மே.20) தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுவை அரசு ரூ.4 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது. அரியாங்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை 2023 ஆம் ஆண்டு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

புதுச்சேரி: 27 ஆண்டுகள் சிறை தண்டனை

image

புதுச்சேரியில் போக்சோ வழக்கில் தனியார் பேருந்து நடத்துநர் பாபு என்பருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் இன்று (மே.20) தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுவை அரசு ரூ.4 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது. அரியாங்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை 2023 ஆம் ஆண்டு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

காரைக்கால் : நாளை மழைக்கு வாய்ப்பு!

image

காரைக்காலில் ஓரிரு இடங்களில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காரைக்காலில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 20, 2024

ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு ஜோதி

image

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33ஆவது நினைவு அஞ்சலி முன்னிட்டு நினைவு ஜோதி யாத்திரை பல மாநிலங்களுக்கு சென்று இன்று புதுச்சேரி வந்து அடைந்தது. அதனைத் தொடர்ந்து, INTUC தலைவர் தலைமையில், தனியார் உணவு விடுதியில் ராஜீவ்காந்தி திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி ஜோதியை வாங்கிக் கொண்டனர். இதில், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News May 20, 2024

புதுவையில் தொடரும் இணையவழி மோசடி

image

புதுச்சேரி திலாசுப் பேட்டை ஹிமான்ஷு மீனாவிடம் ரூ‌.1.22 லட்சம், புதுச்சேரி மங்கலம் விஜயஸ்ரீயிடம் ரூ.5,000 ரெட்டியாா்பாளையம் ராம்குமாரிடம் ரூ 13,200, புதுச்சேரி அய்யங்குட்டிபாளையம் சிலம்பரசனிடம் ரூ 6,670, இலாசுப்பேட்டை வெற்றி வேலிடம் ரூ 3,750 பெற்று நூதனமுறையில் ஏமாற்றி ரூ.1.51 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து இணையவழிக் குற்றத் தடுப்புப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

error: Content is protected !!