India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்தும் செய்தியில், புதுச்சேரி மாநில பெருமக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். விடுதலைப் பெற்ற இந்தியத் திருநாட்டை, தொலைநோக்குப் பார்வை கொண்ட நமது தலைவர்கள், ஒற்றுமை தியாகம் மற்றும் வலுவான கொள்கைகள் மூலம் இறையாண்மை கொண்ட குடியரசாக உருவாக்கினார்கள் என்றார்.

புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம். புதுச்சேரிக்கு புதிதாக இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றிய தம்பதிகள் திவ்யா மற்றும் ராகவ் ஆகிய இருவரும் தற்போது புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் புதுச்சேரி ஐ.ஜி வேறு மாநிலத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், 2026-ம் ஆண்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பாரம்பரிய தற்காப்புக் கலை ஜாம்பவான் பூரணங்குப்பம் பழனிவேலுக்கு, கலைத் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்படுவதாக, மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!

வில்லியனூரைச் சேர்ந்த ஒருவர் கடன் செயலியில் ரூ.4.61 லட்சம் பெற்று, வட்டியுடன் திருப்பிச் செலுத்தியுள்ளார். அதன் பிறகும், மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என கூறி அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

திருபுவனை போலீசார் திருவண்டார்கோயில் – கொத்தபுரிநத்தம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் நெய்வேலியைச் சேர்ந்த தர்மராஜ் (22), ராணிப்பேட்டையைச் சேர்ந்த சூர்யா (24), ஆற்காடைச் சேர்ந்த நவீன் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் திருபுவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி மாற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.