Pondicherry

News September 18, 2024

புதுச்சேரி பந்த்: எல்லைகளில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தம்

image

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் தனியார் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து வரும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் புதுச்சேரி எல்லையான கோரிமேடு, கனக செட்டிகுளம், முள்ளோடை, மதகடிப்பட்டு ஆகியவற்றில் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றிச் செல்லப் படுகின்றனர்.

News September 18, 2024

புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு குடிநீர் தடை

image

வில்லியனுார் குடிநீர் பிரிவில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் காரணமாக நாளை 19ஆம் தேதி கூடப்பாக்கம் பேட் பகுதியிலும், நாளை மறுநாள் 20ஆம் தேதி தில்லை நகரிலும், வரும் 21ஆம் தேதி கணுவாப்பேட்டை பகுதிகளில் பகல் 12 மணி முதல் மதியம் 2 மணிவரை குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News September 18, 2024

புதுவையில் ஹாட்ரிக் அடித்த வெயில்

image

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் ஏப்ரல், மே மாதங்களில் இருப்பதை போல் கடுமையாக இருந்து வருகின்றது. குறிப்பாக கடந்த மூன்று தினங்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் இருந்து வருகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் எப்போது மழை பெய்யும் என்றும் ஏங்கி வருகின்றனர்.

News September 18, 2024

தன்னார்வலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 

image

காரைக்காலில் நாளை புதன்கிழமை (18/09/2024) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நடைபெற இருக்கும் சிறப்பு மருத்துவ முகாமில் ஜிப்மர் அலோபதி மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆயுர்வேத, சித்த, யோகா மருத்துவர்கள் கலந்து கொண்டு ஆப்தமித்ரா தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க உள்ளனர்.

News September 18, 2024

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம்

image

நாளை புதன் கிழமை காலை 10 மணிக்கு நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நடைபெற இருக்கும் சிறப்பு மருத்துவ முகாமில் ஜிப்மர் அலோபதி மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆயுர்வேத, சித்த, யோகா மருத்துவர்கள் கலந்து கொண்டு ஆப் தமித்ரா தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க உள்ளனர். மேலும் உறுப்பினர்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள்,மாவு அடங்கிய தொகுப்பு வழங்கப்படும

News September 18, 2024

புதுச்சேரி அருகே ஆற்றில் மூழ்கி மாணவர் பலி

image

வில்லியனுார் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் சங்கராபரணி ஆற்றில் குளிக்கும் போது நீச்சல் தெரியாமல் ஆற்றில் மூழ்கினார். பின்னர் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆற்றில் மூழ்கிய அவரின் உடலை மீட்டு கரை சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News September 17, 2024

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

புதுச்சேரியில் நாளை 1முதல் 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தப்படும். இதே போல் கடைகளும் அடைக்கப்படுகிறது. தற்போது தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவிப்பு.

News September 17, 2024

நாளை முழு அடைப்பு – திமுகவினர் பிரச்சாரம்

image

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கூட்டணி சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் திமுக மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் இன்று திமுகவினர் அண்ணா சாலை மறைமலை அடிகள் சாலை, நேரு வீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி ஆதரவு கோரினர்.

News September 17, 2024

அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் செயல்படும் – ஆட்சியர்

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
புதுச்சேரியில் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நாளை செப்டம்பர் 18, 2024 (புதன்கிழமை) அன்று பந்த் மற்றும் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்றார்.

News September 17, 2024

முதல்வரிடம் மிரட்டி கையெழுத்து: புதுச்சேரி முன்னாள் முதல்வர் பேட்டி

image

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் புதுவையில் காங் ஆட்சியில் மின் கட்டண உயர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, கட்டண உயர்வை தடுத்து நிறுத்தினோம்.
மின் கட்டண உயர்வு தொடர்பான கோப்பிற்கு முதலமைச்சர் ரங்கசாமியை மிரட்டி கையெழுத்து வாங்கி உள்ளனர். ரேஷன் அரிசி போடவில்லை, அறிவித்த திட்டங்களை செயல் படுத்தவில்லை என கூறினார்.

error: Content is protected !!