Pondicherry

News April 10, 2025

புதுவை: தொகுதி மேம்பாட்டு நிதியில் மாற்றம்

image

புதுச்சேரியில் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்எல்ஏக்கள் வேகமாக செலவிடும் வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்ய மதிப்பீட்டு குழு பரிந்துரை செய்துள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியாக, முன்பு ஒரு கோடி ஒதுக்கப்பட்டது. இதனை என். ஆர் . காங்கிரஸ்- பா. ஜ. க கூட்டணி ஆட்சியில் இரண்டு கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதனை 3 கோடியாக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

News April 10, 2025

புதுச்சேரி டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் எச்சரிக்கை

image

புதுச்சேரி காவல் தலைமையகத்தில் நேற்று (ஏ.09) இரவு செய்தியாளர்களை சந்தித்த டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், “வேலைவாய்ப்பு, கடனுதவி, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம், குறைந்த வட்டியில் கடன் தருகிறோம், பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் அரஸ்ட் என மர்ம கும்பல் பேசி மோசடி செய்து வருகிறது. ஆகவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார். இதை பிறருக்கும் SHARE செய்யுங்க

News April 10, 2025

புதுச்சேரியில் 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை!

image

புதுச்சேரி நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிகள் 2 பேர் மாயமாகியது குறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகளை தேடினர். இதற்கிடையே சிறுமிகள் வீட்டிற்கு வந்ததையடுத்து, அவர்களிடம் போலீசார் விசாரித்ததில் அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக புஷ்பராஜ், மணி என்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 9, 2025

புதுச்சேரியில் நாளை போக்குவரத்து பாதையில் மாற்றம்.

image

புதுச்சேரி – கடலூர் சாலையில் நாளை வியாழக்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் சிவசுப்புரமணிய சுவாமி கோவில் செடல் உற்சவத் திருவிழா நாளை நடக்கிறது. அதனால் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை புதுவை போக்குவரத்து காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

காரைக்கால் அம்மையார் கோயில் பற்றி தெரியுமா?

image

காரைக்காலில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று தான் இந்த அம்மையார் கோயில். 63 நாயன்மார்களில் ஒருவர் தான் இந்த அம்மையார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவபெருமான் இவரை அம்மையே என்று அழைத்ததால், இவர் காரைக்கால் அம்மையார் என அழைக்கப்பட்டார். ஆனி மாதத்தில் மாம்பழம் இறைக்கும் திருவிழா நடைபெறும். திருமணமான பெண்கள் இங்கு வழிபட்டால் அவர்களது திருமண வாழ்வு சிறந்து விளங்கும் என கூறப்படுகிறது. SHARE செய்யவும்

News April 9, 2025

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

image

புதுவை அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார், நேற்று அனைத்து துறைகளுக்கு அனுப்பியுள்ளார். அதில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 53 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 2 சதவீதம் உயர்த்தி, 55 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்

News April 9, 2025

புதுச்சேரியில் வேலைவாய்ப்பு

image

புதுச்சேரி அரசு அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் கட்டுமான உதவியாளர் பதவிக்கான 177 பணியிடங்களை அறிவித்துள்ளது. மாதச்சம்பளம் ரூ.19,900 – ரூ.63,200 வழங்கப்படும் என்றும், எஸ்எஸ்எல்சி, 2 ஆண்டுகள் எலக்ட்ரீஷியன்/வயர்மேன் பட்டயப்படிப்பில் கைவினைத்திறன் சான்றிதழ் பெற்ற ஆர்வமுள்ளவர்கள் மே 2, 2025 க்குள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 9, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா, போலியான கால் சென்டர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போலி அப்ளிகேஷன் மூலம் மோசடி செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தெரியாத நபர்களிடமிருந்து whatsapp, instagram, Facebook மூலம் ஏதேனும் அழைப்புகள் வந்தால் அதை முற்றிலும் நம்ப வேண்டாம் என்றார்.

News April 9, 2025

சிறுமி கர்ப்பம்: வாலிபர் போக்சோவில் கைது

image

புதுவை கிராமத்தை சேர்ந்த ராகுல், பெயிண்டர். இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்பெண் கர்ப்பமடைந்து, பரிசோதனைக்காக புதுவை மருத்துவமனைக்கு சென்றபோது அப்பெண்ணிற்கு, 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி குழந்தைகள் நல அதிகாரி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் ராகுல் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 9, 2025

பள்ளி அருகே புகையிலைப் பொருள் விற்ற பெண் கைது

image

புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோலை நகர் மெயின் ரோட்டில் உள்ள சின்னாத்தா அரசு பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற காயத்ரி என்பவரை முத்தியால்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1000 மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!