Pondicherry

News August 9, 2025

புதுச்சேரியில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 9) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை புகார் மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News August 8, 2025

புதுவை: மாணவர்களுக்கு பருவ நிலா கருத்தரங்கம்

image

புதுவைத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கழகமும் மயூரி சித்திர நாட்டியாலயாவும் இணைந்து நடத்திய பருவ நிலாக் கருத்தரங்கம் அரியாங்குப்பம் முத்தமிழ்க் கலை இல்லத்தில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் முனைவர் இராச.குழந்தைவேலனார் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தேசிய விருதாளர் மண்ணாங்கட்டி மொழி வாழ்த்து வழங்கினார். இதில் தமிழ்மாமணி முனைவர் வேல்முருகன் வரவேற்புரை வழங்கினார்.

News August 8, 2025

புதுவை: எக்ஸ்போ பொருட்காட்சி திறந்து வைப்பு

image

புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் நடைபெறும் தினமலர் எக்ஸ்போ பொருட்காட்சியினை இன்று (ஆகஸ்ட் 8) வெள்ளிக்கிழமை காலை முதலமைச்சர் என் ரங்கசாமி சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் பொதுப்பணித்துறை அமைச்சர் க லட்சுமிநாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொருட்காட்சியினை திறந்து வைத்தனர்.

News August 8, 2025

புதுவை: ஆடி வெள்ளி கிழமையான இன்று இதை தெரிஞ்சிக்கோங்க!

image

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅.இறை வழிபாடு
✅.நேர்த்திக்கடன்கள்
✅.தாலி சரடு மாற்றுதல்
✅.ஆடிப்பெருக்கு வழிபாடு
✅.கூழ் படைத்தல்
✅.விவசாயம்
செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!

News August 8, 2025

புதுவை: உங்கள் தொகுதி MLA நம்பர் இருக்கா?

image

உங்கள் பகுதி பிரச்சனையை நேரடியாக உங்கள் பகுதி பிரதிநிதியிடம் தெரிவிக்கலாம். சட்டமன்ற உறுப்பினர்கள் எண்கள்: ▶ உப்பளம், அனிபால் கென்னடி – 9488483330, ▶ அரியாங்குப்பம், பாஸ்கர் – 9443468258, ▶ காமராஜ் நகர், ஜான் குமார் – 9655680961, ▶ காரைக்கால் தெற்கு, நாஜிம் – 9585400500, ▶ காரைக்கால் வடக்கு, திருமுருகன் – 9344488811, ▶ நெடுங்காடு, சந்திர பிரியங்கா – 9443629191. இந்த தகவலை பிறருக்கு ஷேர் செய்யவும்!

News August 8, 2025

புதுவை: டிகிரி போதும்! உதவியாளர் வேலை

image

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து ஆக.,17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு திருச்சியில் நடைபெற உள்ளது. இத்தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 8, 2025

26 எஸ்.ஐ., பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு

image

புதுச்சேரியில் காலியாக உள்ள 26 எஸ்.ஐ., பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்து தேர்வு மற்றும் அணி வகுப்பு தேர்வு முறை வரும் 22 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான தகுதி பெற்ற 32 எஸ்.எஸ்.ஐ.,க்கள் மற்றும் 183 தலைமைக் காவலர்களின் பெயர் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது.

News August 8, 2025

புதுச்சேரி: இன்று மின் தடை அறிவிப்பு!

image

புதுச்சேரியில் இன்று (ஆகஸ்ட் 8) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ராம்பாக்கம், ஆர்.ஆர்.பாளையம், சொர்ணாவூர், மேல்பாதி, சொர்ணாவூர், வீராணம், கிருஷ்ணாபுரம், பூவரசங்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 04 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 8, 2025

புதுச்சேரி முன்னாள் கவர்னருக்கு முதல்வர் வரவேற்பு

image

புதுச்சேரிக்கு இன்று (ஆகஸ்ட் 7) வருகை தந்த புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை செந்தர்ராஜன் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் ராமலிங்கம் வரவேற்றனர். புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News August 7, 2025

புதுவையில் இஸ்லாமியர் கட்டிய முருகன் கோயில்!

image

புதுவையில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த முகமது கௌஸ் என்பவருக்கு முருகனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்பதே வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது. 1970ஆம் ஆண்டு அன்றைய கவர்னருடன் சேர்ந்து கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார். பல இடையூறுகள் வந்தாலும் 1977ஆம் ஆண்டு கோயிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்தி முடித்தார். இக்கோயிலுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் கௌசிக பாலசுப்பிரமணியர் கோயில் என பெயர் வைத்தார். ஷேர் செய்யுங்க!

error: Content is protected !!