India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் கிளையின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் நடத்தும் இலவச சணல் பை தயாரிக்கும் பயிற்சி வகுப்பு செப் 9 ஆம் தேதி தொடங்கி 13 நாட்கள் நடைபெறும். எழுதப் படிக்க தெரிந்த கிராம பஞ்சாயத்தை சார்ந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான பயிற்சி நேரம் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும் என பயிற்சி மைய இயக்குனர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.
திமுக மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் வி.எஸ்.பெரியசாமி திடீரென உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இறந்த செய்தி அறிந்து அவரது இல்லம் சென்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களுடன் அஞ்சலி செலுத்திய பொழுது. உடன் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க. கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள். மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பெரம்பலூர் அருகே செங்குணம் கைகாட்டி பகுதியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் முயல் வளர்ப்பு குறித்த இலவச ஒரு நாள் பயிற்சி முகாம் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. இதில் முயல் இனங்கள் மற்றும் அவற்றின் இனப்பெருக்கமேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, தீவன மேலாண்மை, நோய்த் தடுப்பு முறை மற்றும் பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விமர்சனத்திற்குரிய புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் இடம்பெறும் விளம்பர சுவரொட்டிகள் மற்றும் விளம்பர தட்டிகள் போன்றவைகள் வைக்கப்படுதல் கூடாது. மேலும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவேற்றம் செய்யக்கூடாது. மத வழிபாட்டு இடங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்க கூடாது என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விமர்சனத்திற்குரிய புகைப்படங்கள் (ம) வாசகங்கள் இடம்பெறும் விளம்பர சுவரொட்டி, தட்டிகள் போன்றவை வைக்கப்படக்கூடாது. மேலும், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவேற்றம் செய்யக்கூடாது. மீறி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
மலையாளப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கிட ஏதுவாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் சமுதாய கூடத்தின் சாவியினை செப்டம்பர் மூன்றாம் தேதி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
வேப்பந்தட்டை வட்டம், அயன் பேரையூரில் வருகின்ற செப்-11 ஆம் தேதி, மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. எனவே அயன்பேரையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் தங்களது கோரிக்கைத் தொடர்பான மனுக்களை அயன் பேரையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் ராஜா தியேட்டர் அருகில் விநாயகர் சதுர்த்தி விழா விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதில், FREE PALESTIN என பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கும், பாலத்தீனுக்கும் என்ன தொடர்பு உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவில் கலவரத்தை தூண்டும் வகையில் பேனர் வைத்துள்ளதாக இந்து முன்னணியினர் குற்றம்சாட்டுகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்யப்படும் விநாயகர் சிலைகள் தூய களிமண்ணால் செய்யப்பட வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட சார் ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தியதை கடைப்பிடிக்க வேண்டும். தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து சார் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர் மற்றும் மங்களமேடு துணை மின் நிலையங்களில் நாளை (செப்.4) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், முருக்கன்குடி, நகரம், நமையூர், எறையூர் பிம்பலூர், பசும்பலூர், சின்னாறூ, பெரம்பலூர், ஆடுதுறை, கழனிவாசல் உள்ளிட்ட பிறபகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.