Perambalur

News September 10, 2024

பெரம்பலூர் மின்நுகர்வோர் கவனத்திற்கு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் குறைதீர் நாள் கூட்டம் பெரம்பலூர் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம்.

News September 10, 2024

வாக்குச் சாவடிகள் கட்டடங்கள் குறித்த அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 05 வாக்குச்சாவடிகள் மற்றும் 148 குன்னம் சட்டமன்ற தொகுதியில் 15வாக்குச்சாவடிகள் கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால் வேறு கட்டிடத்திற்கு மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆட்சேபணைகள் ஏதேனும் இருப்பின் 16.09.2024க்குள் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 9, 2024

பெரம்பலூரில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

image

பெரம்பலூா் மாவட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை (செப். 10 ) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மின் நுகா்வோா்களின் குறைகளை தீா்க்கும் வகையில், மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம, மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

News September 8, 2024

பெரம்பலூர் மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் UPSC தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்பட உள்ளது. தகுதியான மாணவர்கள் Screening test மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com முகவரியில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் இன்று தகவல்

News September 8, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் UPSC தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்பட உள்ளது. தகுதியான மாணவர்கள் Screening test மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com முகவரியில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் இன்று தகவல்

News September 8, 2024

பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 1.9.204 முதல் 30.9.2024 வரை நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9443852306, 90479 49366 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்

News September 7, 2024

மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின்,நான் முதல்வன் எனும் திட்டத்தின் கீழ், “உயர்வுக்குப் படி”, +2 படித்து, உயர்கல்வியில் சேராமல் இருக்கும் மாணவர்களின் கல்லூரி கல்வியை உறுதி செய்யும் வகையில் 2-கட்டங்களாக உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக செப்-10,பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை -9 மணிமுதல் 5- மணிவரை நடைபெறவுள்ளது, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

பெரம்பலூரில் புதுமைப் பெண் திட்டத்தில் 4,551 மாணவிகள் பயன்

image

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சி பகுதியில், அரசின் திட்டங்களில் பயனடைந்தவா்களைச் சந்தித்து திட்டங்களின் பயன்பாடு குறித்த நேற்று மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் கேட்டறிந்தார். அப்பொழுது அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் இதுவரை 4,551 மாணவிகள் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா் தெரிவித்தார்.

News September 7, 2024

நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டம் இணையத்தளம் வெளியீடு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி, முன்னாள் மாணவர்கள் பங்களிப்பு, பள்ளி மேலாண்மை குழு மற்றும் அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல் போன்ற திட்டங்கள் குறித்து விளக்கும் வகையான நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி, இணையதள முகவரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேற்று (06.09.2024) வெளியிட்டார்.

News September 6, 2024

திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன் அடைந்த குரும்பலூர் கல்லூரி மாணவர்களின் இல்லத்திற்குச் சென்று திடீர் ஆய்வு செய்து மாணவர்களிடம் திட்டத்தை கேட்டறிந்தார். இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, நாங்கள் நன்றாக படிக்கிறோம் என்று மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கூறினர். படிப்பு சம்பந்தமாக என்ன உதவி வேண்டுமானாலும் மாவட்ட ஆட்சியரை அணுகலாம் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!