India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த, வேலை இல்லாதோருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு உதவி தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “உதவித்தொகை பெற பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று பூர்த்தி செய்து வரும் பிப். 28ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது
வடலூர் ராமலிங்கர் நினைவு தினமான வருகிற 11ஆம் தேதி, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கும், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கும், எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்கும், என்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில், பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது, சிறப்பு சிறார் காவல் திட்டத்தில் 2 சமூகப் பணியாளர் மற்றும் 1 உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் ஆகிய தற்காலிக பணியிடங்களை நிரப்ப வரும் பிப்.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான விண்ணப்ப படிவத்தை <
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூரைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி (63) என்பவர் தீராத வயிற்று வலியால் அவதியடைந்ததனால், மனமுடைந்த பெரியசாமி கடந்த 3-ஆம் தேதி தனது வயலுக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ள நிலையில், அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்துள்ளார்.
பெரம்பலூர் நகராட்சித்திடலில் நடத்தும் 9வது பெரம்பலூர் புத்தகத்திருவிழாவின் 8-ம் நாளான நாளை (07.02.2025) எழுத்தாளர்.நாஞ்சில் நாடன் “கொங்குதேர் வாழ்க்கை” என்ற தலைப்பிலும், பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் “பெயரில் என்ன இல்லை” என்ற தலைப்பிலும், எழுத்தாளர் ‘சுளுநீதி’ இரா.முத்துநாகு “தமிழர் அறிவியலான சித்த மருத்துவம்” என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல்.
பெரம்பலூர் நகராட்சி திடலில் தொடங்கப்பட்ட 9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவை 5.2.2025 வரை 27,825 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதுவரை ரூ.34,09,305 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பிப்ரவரி ஆறாம் தேதியான இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் நடைபெறும் 9ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை இதுவரை 15,700 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பார்வையிட்டுள்ளனர் என நகராட்சி நிர்வாகம் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று (பிப்.05) வரை ரூ.19.9 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <
மருவத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் குற்றவாளி, கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த நல்லதுரைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000 அபராதம் விதித்து பெரம்பலூர் மகிலா நீதிமன்ற நீதிபதி இந்திராணி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்வரின் புதிய திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடன் உதவி வழங்கப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற exwel.schemes.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04329 – 221011 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.