Perambalur

News November 11, 2024

பெரம்பலூரில் இன்று மின்தடை

image

மேட்டூர் மற்றும் பெரியசாமி கோவில் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரபெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம், அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர் ஆகிய பகுதிகளில் இன்று (நவ.11) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News November 11, 2024

பெரம்பலூரில் மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

News November 10, 2024

மளிகை கடையில் போதைப்பொருட்கள் விற்பனை: போலீசார் அதிரடி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் வாலிகண்டபுரம் கிராமத்தில் குமரன் என்பவர் தனக்குச் சொந்தமான  மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்காபோன்ற போதைப்பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரியவந்த நிலையில், தனிப்படையின் குழுவினர் மேற்படி அவரை கைதுசெய்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News November 10, 2024

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தேர்வு

image

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. தந்தை ஹேன்ஸ் ரோவர் பள்ளியில் நடைபெற்ற தேர்வை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் சென்று பார்வையிட்டார். இத்தேர்விற்கு 823 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 514 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 10, 2024

பெரம்பலூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15-ஆம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தகுதி உள்ள நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார்.

News November 10, 2024

பெரம்பலூரில் கஞ்சா விற்றவர் கைது

image

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாடாலூர் போலீசார் ரோந்து சென்றனர். பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே டூ வீலரில் நின்று கொண்டிருந்த பார்த்திபன் (20) என்ற நபரை விசாரணை செய்தபோது அதில் 100 கிராம் அளவுள்ள கஞ்சா பொட்டலத்தை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. தொடர்ந்து பார்த்திபனை கைது செய்து அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News November 9, 2024

மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலைவாய்ப்பு முகாம்” பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3ஆம் வெள்ளிக்கிழமை நடைப்பெற்று வருகிறது. அதனடிப்படையில் இம் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 15.11.2024 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

100 நாள் வேலைத்திட்டத்தில் ரூ‌.34 லட்சம் மோசடி

image

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற மோசடிகள் குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் தணிக்கைக் குழு நடத்திய ஆய்வின் படி, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் சுமார் ரூ.34 லட்சம் மோசடி நடந்ததை வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, சம்பந்தபட்ட பணியாளரை பணியிடை நீக்கம் செய்து, அரும்பாவூர் போலீசில் புகாரையடுத்து வழக்குப் பதிவு செய்து முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 9, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

image

குன்னம் தாலுகாவிற்குட்பட்ட, முருக்கன்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (09.11.2024) மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது .இந்நிகழ்வில் துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

News November 9, 2024

போலீசிடம் பொய் புகார் – செக் வைத்த போலீஸ்

image

பெரம்பலூரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர் தனது வாகனத்தை மறித்து ஓட்டுனரை தாக்கி விட்டு ரூ.10 லட்சம் பணத்தை திருடி சென்றதாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்தார். இந்நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!