India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூட்டுறவுத்துறை சார்பில் இன்று (25.11.2024) நடைபெற்ற நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
முதலமைச்சர் கோப்பை 2024- க்கான போட்டிகளில் மாநில அளவில் பதக்கம் வென்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை இன்று (25.11.2024) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், அவர்களுக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயத்தில் திருகல் நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்த புரோ பிகோனசோல் 25 EC (அ) ஹெக்ச கோனசோல் 5EC இவற்றுள் ஏதேனும் ஒரு பூஞ்சான கொள்ளையை ஏக்கருக்கு 200 மி. லி.வீதம் இழை வழியாக தெளிக்கலாம் என தோட்டக்கலைத்துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றி பயன் பெற வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
வேப்பந்தட்டை அடுத்த வி.களத்தூர் தனியார் பள்ளியின் மாணவர்கள் திருச்சியில் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியின் 17 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ராபி பருவத்தில் பயிரிடப்படும் சின்ன வெங்காயம் எதிர்பாராத இயற்கை சூழலில் ஏற்படும் இழப்பு ஏற்படும் பட்சத்தில் வருமானம் கிடைக்க பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. வரும் 30ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். ஏக்கருக்கு ரூ.2060 செலுத்த வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பெரம்பலூா், குன்னம், தேனூா், கீழப்பெரம்பலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை (நவ. 25) நடைபெறுகிறது. இதனால், புதுவேட்டக்குடி, காடூா், நமங்குணம், கீழப் பெரம்பலூா், கோவில்பாளையம், தேனூா், துங்கபுரம், குழுமூா், கே.ஆா்.நல்லூா், அங்கனூா், அகரம் சீகூா், வயலப்பாடி மற்றும் கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 28.11.2024 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடைமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக குட்கா கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட கரும்பாயிரம் (40) ஓலைப்பாடி கிராமம், குன்னம் வட்டம் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க ஆதர்ஷ் பசேரா மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி தலைவர் தலைமை வகித்து தேவைகளை கேட்டறிந்து அரசின் நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.