Perambalur

News November 24, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை

image

பெரம்பலூா், குன்னம், தேனூா், கீழப்பெரம்பலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை (நவ. 25) நடைபெறுகிறது. இதனால், புதுவேட்டக்குடி, காடூா், நமங்குணம், கீழப் பெரம்பலூா், கோவில்பாளையம், தேனூா், துங்கபுரம், குழுமூா், கே.ஆா்.நல்லூா், அங்கனூா், அகரம் சீகூா், வயலப்பாடி மற்றும் கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2024

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்

News November 23, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 28.11.2024 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடைமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News November 22, 2024

பெரம்பலூரில் குட்கா கடத்திய நபர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக குட்கா கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட கரும்பாயிரம் (40) ஓலைப்பாடி கிராமம், குன்னம் வட்டம் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க ஆதர்ஷ் பசேரா மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

News November 22, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி தலைவர் தலைமை வகித்து தேவைகளை கேட்டறிந்து அரசின் நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News November 22, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக ஆசிரியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி தலைவர் தலைமை வகித்து தேவைகளை கேட்டறிந்து அரசின் நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News November 22, 2024

போக்சோ குற்றவாளிக்கு 10 வருடம் சிறை தண்டனை

image

பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2020ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக மணி என்பவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இவ்வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 10 வருடம் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News November 22, 2024

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், இன்று காலை 10.15 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News November 21, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பு 30.11.2024 இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம். ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News November 21, 2024

வேப்பந்தட்டை: விடுதலை செய்யப்பட்ட 21 விசிக தொண்டர்கள்

image

வேப்பந்தட்டை ஒன்றியம் கை.களத்தூர் பேருந்து உடைக்கப்பட்டதாக 23 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கில் முன்னாள் விசிக மாவட்ட அமைப்பாளர்கள் பொன். பால்ராஜ் (எ) பாவணன், முன்னாள் மாவட்ட செயலாளர் சி. தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட 21 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வழக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு முடிவடைந்து இன்று (21/11/2024) விடுதலை அடைந்தனர்.

error: Content is protected !!