India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றம் நடைபெறாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பஸேரா உத்தரவின்படி ஏடிஎஸ்பி மதியழகன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று வழக்கமான குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அதிரடி சோதனையில் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு, மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் கே என் நேரு பெரம்பலூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும், நகராட்சிகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.03.2025 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், இயந்திரங்கள், விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 416 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வி. களத்துார் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தனது 9 வயதான கவினேஷ் என்ற மாற்றுத்திறனாளி மகனுக்கு காதொலிக்கருவி கேட்டு கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையினை பரிசீலனை செய்த கலெக்டர் காதொலிக்கருவி வழங்க அலுவலருக்கு உத்தரவிட்டார். 10 நிமிடத்தில் தனது குழந்தைக்கு காதொலிக்கருவி வழங்கிய ஆட்சியருக்கு மாரியம்மாள் நன்றி தெரிவித்தார்.
‘பெரும்புலியூர்’ என்று அழைக்கப்படும் பெரம்பலூர் மாவட்டம் புலி, சிறுத்தை, கரடி வாழ்ந்த வனப்பகுதியாக காணப்பட்ட இடமாகும். அதுமட்டுமின்றி ‘லாடபுரம்’ என்ற பகுதியில் பஞ்சபாண்டவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இன்றும் இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல உங்க ஊரில் உள்ள வேறு ஏதேனும் சிறப்புகள் இருந்தால் அதை கமெண்ட் பண்ணுங்க, தெரியாதவர்களுக்கு உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க..
பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 5 கோயில்கள்:
*வாலீஸ்வரர் கோயில் (வாலிகண்டபுரம்)
*ஏகாம்பரேஸ்வரர் கோயில் (செட்டிகுளம்)
*குற்றம் பொருந்தவர் கோயில் (எஸ். ஆடுதுறை)
*செட்டிகுளம் பலதண்டாயுதபாணி கோயில்
*மதனகோபாலசுவாமி கோயில் (பெரம்பலூர்)
‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கி கடன் உதவி வழங்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மேலும் விவரங்களுக்கு 04329-221011 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க
முருகனை வேலுடன் கண்டிருப்பீர்கள் ஆனால் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் என்ற ஊரில் முருகப்பெருமான் கையில் கரும்பு ஏந்திய கோலத்தில் காட்சியளிக்கிறார். இவரை கண்ணாரக்கண்டு தரிசிப்பவர்களின் வாழ்க்கை இனிமை மிகுந்ததாக அமையும். மேலும் இனிமையான வாழ்க்கைத் துணை அமைவார்கள் என்ற ஐதிகம் உள்ளது. கல்யாணத்திற்கு பெண்/பையன் தேடும் உங்களுக்கு தெரிந்தவர்களை இந்த கோயில் குறித்து SHARE பண்ணுங்க…
இந்த ஊரில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்ததாலும், அதிலிருந்து பல பொருள்கள் இந்த ஊர் மக்கள் தயாரித்து வந்ததாலும், இந்த ஊருக்கு பிரம்பலூர் என்ற பெயர் வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் பெரம்பலூர் என மாறியதாக கூறப்படுகிறது. மேலும் பெரும்பல்லூர் என்னும் பெயரே பெரம்பலூர் என மாறியதாகவும் பெரியோர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு வேறு பெயர் காரணம் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க. உங்க ஊர் பெருமைய SHARE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.