Perambalur

News April 1, 2025

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆய்வுக்கூட்டம்

image

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (01.04.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

News April 1, 2025

பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

image

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (1.4.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

News April 1, 2025

உங்க வீட்டு குட்டீஸ்க்கு செம ட்ரீட் கொடுக்க தயாரா?

image

விடுமுறை தொடங்கிய நிலையில் மக்கள் பல்வேறு இடங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். அதன்படி தற்போது பெரம்பலூருக்கு அருகில் உள்ள திருச்சியில் இருக்கும் பொழுதுபோக்கு இடங்கள் 1.வண்ணத்துப்பூச்சி பூங்கா, 2.கோளரங்கம், 3.அரசு அருங்காட்சியகம், 4.முக்கொம்பு, 5.புளியஞ்சோலை போன்ற இடங்கள் இருக்கிறது. குட்டிஸ், குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அனைவருக்கும் Share பண்ணுங்க..

News April 1, 2025

அங்கன்வாடி ஆசிரியராக இலவச பயிற்சி!

image

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <>இங்கு கிளிக்<<>> செய்து அறியலாம். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 1, 2025

பள்ளிக்கு செல்லாததை கண்டித்த தந்தை: மகன் மாயம்

image

பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் பரணிதரன்(14), 9ம் வகுப்பு படித்து வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தொண்டமாந்துறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக பரணிதரன் பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனை ராஜகோபால் கண்டித்ததனால் கோபித்துக் கொண்ட பரணிதரன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

News April 1, 2025

பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்

image

குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் ஒன்றியம் வெண்மணி சிதம்பரம் மானிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் எம்.எல்.ஏ மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

பெரம்பலூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

News March 31, 2025

பாடாலூர் அருகே விபத்து-ஒருவர் பலி

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் என்பவர், பெரம்பலூர் மாவட்டம், இரூர் கிராமத்தில் தங்கி கம்ப்ரசர் மோட்டார் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு 8:30 மணியளவில் காரை பிரிவு ரோடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்கும் போது, தேனியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 30, 2025

பெரம்பலூர்: மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை

image

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்!

News March 30, 2025

பெரம்பலூரில் கொளுத்திய வெயில்-பரிதவித்த மக்கள்

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக கடந்த 27ம் தேதி முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

error: Content is protected !!