India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் கோனேரி ஆற்றங்கரையில் வாலீஸ்வரர் கோவில் உள்ளது. சோழர் ஆட்சி காலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது. இந்த கோவிலில் 134 கல்வெட்டுகள் உள்ளன. கோவிலில் உள்ள ஒரு குளம் 1761ல் மதுரையை ஆட்சிபுரிந்த கிருஷ்ண கோனாரால் கட்டப்பட்டுள்ளது. இது மன்னர்கள் நீராடுவதற்காக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. SHARE செய்யவும்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுவைப் பெற்றார்கள். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 32 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 12.12.2024 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறவிருந்த அரையாண்டு ஆங்கில தேர்வு தொடர் கன மழையால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு ஆங்கிலத் தேர்வு வருகின்ற 21.12.2024ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என பெரம்பலூர் மாவட்ட (CEO) முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
பெரம்பலூா் நகரில் உள்ள 2 கடைகளில் மா்ம நபா்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும், 3 கடைகளில் திருட்டு முயற்சி நடைபெற்றதும் செவ்வாய்க்கிழமை நேற்று தெரியவந்தது. அதேபோல் பெரம்பலூர் அருகே உள்ள கல்லுடையான் கோவிலில் உள்ள உண்டியலில் ரூ.500 திருடப்பட்டதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவங்கள் குறித்து பெரம்பலூர் போலீசார் நிகழ்விடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூா் அருகேயுள்ள மேலப்புலியூா் கிராமத்திலுள்ள பழைய காலனி வீதியில் சுமாா் 100- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்நிலையி ல் அப்பகுதி குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக சில நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நேற்று மாலை தண்ணீர் குழாயை சீரமைத்து தர கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ், கைவினை கலைஞர்களுக்கு ரூ.3 லட்சம் வரை 25 சதவிகித மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது. தொழில் துவங்க ஆர்வமுள்ள கைவினைக் கலைஞர்கள் msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என பெரம்பலூர் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்.
பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்பு குழு கூட்டம் இன்று (17.12.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் விளையும் பொருட்களான வெங்காயம், பருத்தி, மக்காசோளம் மற்றும் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்வது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (டிச.17) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் பி.ரவிக்குமாா் (சிறுவாச்சூா்), பொ.செல்வராஜ் (பெரம்பலூா்), கி. மாணிக்கம் (கிருஷ்ணாபுரம்) ஆகியோா் தெரிவித்துள்ளார்.
வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) & வர்த்தகத் துறையுடன் இணைந்து நடத்தக்கூடிய பயிற்றுநர்களுக்கான ஒருநாள் பயிற்சி முதல்வர் முனைவர் து.சேகர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் தொழில் முனைவோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் 25 பேர் கலந்து கொண்டனர்.
இன்று (16.12.2024) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில்,நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்நிகழ்வின்போது பல்வேறுத் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.