India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த நபர்களை கைது செய்து வருகின்றனர். இன்று சித்தளி பேருந்துநிலையத்திற்கு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைனில் விற்றுக் கொண்டிருந்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 செல்போன், லாட்டரி நம்பர் எழுதிய சீட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி ராஜேந்திரனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் சார்பில் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் சகாதேவன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு ஊர்தி ஓட்டுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து ஆட்சியரிடம் மனு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் மதுக் குற்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 40 டூவீலர்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் வரும் டிச.30 அன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காலை 10 மணிக்கு அரசு நிா்ணயித்த விலையில் பொது ஏலம் விடப்படுகிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் டிச. 28-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் முன் அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம். செய்தியை ஷேர் செய்யவும்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் டிச.27ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
வேப்பந்தட்டை தாலுகாவிற்குட்பட்ட விசுவக்குடி நீர்தேக்க அணையினை இன்று (23.12.2024) திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பியுமான இராசா நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிகழ்வில் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் தாலுகாவிற்குட்பட்ட கீழ்க்கணவாய் கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி வழக்கறிஞர் வெள்ளைச்சாமி அண்மையில் இயற்கை எய்தியதை தொடர்ந்து இன்று (23.12.2024) அவரது இல்லத்திற்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பியுமான இராசா நேரில் ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின் போது, எம்எல்ஏ பிரபாகரன், திமுக மாவட்டப் பொறுப்பாளர் ஜெகதீசன் உட்பட பலர் இருந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (23.12.2024) மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அப்போது ₹.2.56 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 19 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.
குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு கோவில் பூட்டை உடைத்து அம்மன் 1 பவுன் நகை, ரூ.25,000 உண்டியல் பணத்தையும் மர்ம நபர்கள் சிலர் திருடி சென்றனர். கோவிலின் அருகே உள்ள சிசிடிவி காட்சி மூலம் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் சிறுவயலூர் பகுதியில் பசு மாடு மற்றும் 2 கன்று குட்டிகளை கொட்டகைக்கு உள்ளே கட்டிவிட்டு, இன்று காலை வழக்கம் போல் பால் கறப்பதற்காக வயலுக்கு சென்று பார்த்த போது, கொட்டகைக்குள் மின்னல் தாக்கி பசு மாடு மற்றும் 2 கன்று குட்டிகள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேப்பந்தட்டை பகுதியில் உள்ள பாஸ்புட் கடை அருகே அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்றுக் கொண்டிருந்த ராமச்சந்திரன் (38) என்ற நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ய பயன்படுத்திய போனை பறிமுதல் செய்து அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.