Perambalur

News December 29, 2024

இலாடபுரம் தலைமை ஆசிரியருக்கு விருது

image

கரூர் தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் தனியார் மஹாலில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், திரைப்பட இயக்குநர் பாண்டியராஜன், இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாயக்கிருஷ்ணனுக்கு கல்விச் சேவையைப் பாராட்டி இன்று தமிழ் மகுடம் விருது 2024 வழங்கி பாராட்டினார்.

News December 29, 2024

பெரம்பலூர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்ட்ரால் பரபரப்பு

image

பெரம்பலூர் நகரம் முழுவதும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஒட்டப்பட்ட போஸ்ட்ரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில்  வேறொரு முக்கிய குற்றவாளி இருப்பதாக கூறி ‘யார் அந்த சார்’ என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரம்பலூர் நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

News December 28, 2024

பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவன் தற்கொலை

image

பெரம்பலூர் அருகே எளம்பலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் கண்ணன் (18). பெரம்பலூர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கணினி அறிவியல் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கண்ணன் அடிக்கடி வெளியே சுற்றி வந்ததை அவரது தாயார் கண்டித்ததால், மனமுடைந்த கண்ணன் களைக் கொல்லி மருந்து அருந்தியதில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரம்பலூர் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

News December 27, 2024

பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், வேளாண்மை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ், 16 விவசாயிகளுக்கு ரூ.11,49,112 அரசு மானியத்தில் விசை களையெடுக்கும் கருவியும், தோட்டக்கலைத் துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு தலா ரூ.8,000 மானியத்தில் மண்புழு உர படுகைகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று வழங்கினார்.

News December 27, 2024

இருசக்கர வாகன திருடர்கள் கைது: 18 பைக்குகள் பறிமுதல்

image

பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த சில வருடங்களாக பைக் திருட்டில் ஈடுபட்ட மங்களமேடு, அத்தியூரை சேர்ந்த முகமது இப்ராஹிம் (22), ஆடுதுறை கிராமத்தைச் சேர்ந்த சூர்யா(26), கீழக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ரகுமான் (28), சேலம், சின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(25 ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்து, ரூ.15 லட்சம் மதிப்புள்ள 18 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

News December 27, 2024

செட்டிகுளம் கோவிலில் ரூ 6,18,860 உண்டியல் காணிக்கை

image

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள கோயில்களின் உண்டியல் காணிக்கை என்னும் பணி அறநிலை துறை ஆய்வாளர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. பணியில் கோவில் நிர்வாகிகள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட 35 பேர் பங்கேற்றனர். உண்டியலில் காணிக்கை ரூ6,18,860 ரொக்கமும் 5 கிராம் தங்கமும், 273 கிராம் வெள்ளியும் இதுவரை காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News December 27, 2024

பெரம்பலூரில் சிறுவன் உட்பட கஞ்சா விற்ற 3 பேர் கைது

image

பெரம்பலூர் போலீசார் ஓர் தனியார் கல்லூரியின் அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மூவரை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கவுல்பாளையம் பிரபு (19), பெரம்பலூர் பிரவீன் (19) மற்றும் ஒரு சிறுவன் என 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News December 26, 2024

Way2News-இல் நிருபராக சேர விருப்பமா?

image

தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News செயலியில் உள்ளூர் செய்தியாளராக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில் <இங்கே க்ளிக் செய்யவும்> பதிவு செய்யவும். இதன் மூலம் உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுவது மட்டுமில்லாமல் கூடுதல் வருவாய் ஈட்டவும், இது ஒரு அறிய வாய்ப்பாக அமையும். மேலும் விவரங்களுக்கு +91 8466022122 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News December 26, 2024

பெரம்பலூர் அருகே பெண்ணிடம் ரூ.63 லட்சம் மோசடி: 2 பேர் கைது

image

பெரம்பலூர் மாவட்டம், அயிலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாரி எனும் பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.63,87,620 ஏமாற்றிய வடமாநில குற்றவாளிகள் 2 பேரை பெரம்பலூர் சைபர் குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் குற்றவாளிகள் வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மக்கள் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

News December 26, 2024

ஆலத்தூர்: ஒரே ஊரை சேர்ந்த இருவர் தற்கொலை

image

ஆலத்தூர் தாலுகா, தெரணி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம் (30). இதேபோல தெரணி நடுத்தெருவை சேர்ந்தவர் சன்னாசி (55). வெவ்வேறு உடல்நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்ட இருவரும் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் வெவ்வேறு பகுதிகளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். நேற்று ஒரு நாளில் ஒரே ஊரை சேர்ந்த இருவர் தற்கொலை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!