Perambalur

News January 20, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு 

image

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க ஒரு நபருக்கு ரூ.50000 நிதி உதவி வழங்கி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 45 வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 27.1.25 தேதிக்குள் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 20, 2025

பெரம்பலூர்: 75 வயது பாட்டிக்கு 30 வயது என ஆதார்

image

பெரம்பலூர் சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி தெய்வானை (வயது 75). இவர் இன்று (ஜனவரி 20) தனது தள்ளாடும் வயதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். அதில் தனக்கு 75 வயது ஆகிறது என்றும், ஆனால் ஆதார் அட்டையில் 1994 ஆம் ஆண்டு இருப்பதால் தனக்கு 30 வயதாக உள்ளது என்று ஓய்வூதிய உதவித்தொகை மறுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

News January 20, 2025

பெரம்பலூர் : மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (20.01.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் பெற்றுக்கொண்டார். இந்த குறைதீர் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

News January 20, 2025

பெரம்பலூர்: நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்ப்பட்ட சிறுவாச்சூர், குரூர், எசனை, கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Share Now..

News January 19, 2025

குன்னத்தில் இலவச கலைஞர் கணினி பயிற்சி மையம் திறப்பு

image

குன்னம் தொகுதி இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கான, “கலைஞர் கணினி பயிற்சி மையத்தை” கழக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. இராசா இன்று (ஜன-19) குன்னத்தில் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ். எஸ்.சிவசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

News January 19, 2025

பெரம்பலூர்: திருமாந்துறை கிராமத்தில் 40 பேர் மீது வழக்குப்பதிவு

image

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள திருமாந்துறை கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜன.17) அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பைச் சேர்ந்த 5 பேரின் வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News January 18, 2025

பெரம்பலூருக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை!

image

2025-26-ம் நிதி ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி, திட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும், ஆகையால் இந்த முறை பட்ஜெட்டில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கி, புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த உங்கள் கருத்து என்ன?

News January 17, 2025

பெரம்பலூர்: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா?

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகம். அருகில் உள்ள மாவட்டங்களான சேலம் மற்றும் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு செல்வதற்கு பேருந்து நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆகையால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் மாவட்டத்திற்குள் ஒரு ரயில் போக்குவரத்து வேண்டும் என கோரிகையை முன்வைத்துள்ளனர். இது பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

News January 17, 2025

மாடுபிடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய அரசுக்கு கோரிக்கை

image

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் காளைகளை அடக்க சென்று பாதிக்கப்படும் இளைஞர்களுக்கு, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி விழா குழுவினர் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாடுகளுக்கும் சேர்த்து இன்சூரன்ஸ் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி நீங்க என்ன சொல்லுரிங்க கமாண்ட் பண்ணுங்க.

News January 16, 2025

பெரம்பலூரில் பலத்த பாதுகாப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் காணும் பொங்கலான இன்று பெரும்பாலான இடங்களில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடுவர் என்பதால் மக்கள் கூடும் இடங்களில போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு, குற்றங்கள் நடக்காமல் இருக்க பொதுமக்கள் கவனமாக இருக்க போலீசார் எச்சரித்தனர்.

error: Content is protected !!