Perambalur

News January 8, 2025

பெரம்பலூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

image

பெரம்பலூரில் திருட்டை தடுத்து நிறுத்தி பொதுமக்களின் உடமைகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி நாளை மறுநாள் (ஜன.10)  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவதாக செயற்குழு கூட்டத்தில் கூடுதல் காவலர்களை நியமனம் செய்வது, கூடுதல் காவல் நிலையம் அமைப்பது குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

News January 8, 2025

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் போட்டிகள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மற்றும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு பத்தாயிரம் விதம் வழங்கப்பட உள்ளது. பள்ளி கல்லூரிகளின் சார்பில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவர் கலந்து கொள்ளலாம்.

News January 8, 2025

இளைஞர்களுக்கு உதவித்தொகை – கலெக்டர் 

image

மாற்றுத்திறனாளி பள்ளியிருதி வகுப்பு வரையிலான தகுதிக்கு மாதம் ரூ. 600, பிளஸ் 2 தகுதிக்கு ரூ.750, பட்டப்படிப்புக்கு ரூ.1000 வீதம் வழங்கப்படும். இதர மனுதாரர்களை பொறுத்தவரையில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 வீதம் வழங்கப்படும். ஆண்டு தோறும் அளிக்க வேண்டிய சுய உறுதிமொழி ஆவணம் பிப் 28ஆம் தேதிக்குள் தகுதி சான்றினை சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

பெரம்பலூர்: நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம்

image

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜன.08) நடைபெறவுள்ளதால், பெரம்பலூர் புதிய, பழைய பஸ் நிலையங்கள், மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகர், நான்கு ரோடு, பாலக்கரை, சிட்கோ, துறையூர் சாலை, அரணாரை, கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

News January 7, 2025

பெரம்பலூர்: பெண் வாக்காளர்களே அதிகம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் உள்ள 5,86,073 வாக்காளர்களில் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். அதன்படி, பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 9,056 பெண் வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 3,805 பெண் வாக்காளர்களும் என 2 தொகுதியிலும் உள்ள ஆண் வாக்காளர்களை விட அதிகமாக உள்ளனர். ஷேர் பண்ணுங்க.

News January 7, 2025

பெரம்பலூர்: இறுதி பட்டியலில் 5.86 லட்சம் வாக்காளர்கள்

image

பெரம்பலூர் (தனி) தொகுதியில் 1,49,106 ஆண் வாக்காளர்களும், 1,58,162 பெண் வாக்காளர்களும், 28 இதர வாக்காளர்களும் சேர்த்து 3,07,296 வாக்காளர்கள் உள்ளனர். குன்னம் தொகுதியில் 1,37,485 ஆண் வாக்காளர்களும், 1,41,290 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும் சேர்த்து 2,78,777 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 5,86,073 வாக்காளர்கள் உள்ளனர்.

News January 6, 2025

பெரம்பலூர் : ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேசிய கீதத்தையும்,தமிழக மக்களையும் அவமதிப்பு செய்யும் வகையில் வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி யைக் கண்டித்து
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை(07.01.2025) காலை 10.00மணியளவில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்

News January 6, 2025

பெரம்பலூரில் 3-லட்சத்திற்கும் மேல் வாக்காளர்கள்

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட ஆட்சியருமான, கிரேஸ் பச்சாவ் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (06.01.2025) வெளியிட்டார். இதன்படி 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடிகளில் மொத்தம் 3,07,296 வாக்காளர்கள் உள்ளனர்.

News January 6, 2025

பெரம்பலூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் (Final Electoral Roll) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜன.06) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

News January 6, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் இத்தனை சிறப்புகளா

image

‘பெரும்புலியூர்’ என்று அழைக்கப்படும் பெரம்பலூர் மாவட்டம் புலி, சிறுத்தை, கரடி வாழ்ந்த வனப்பகுதியாக காணப்பட்ட இடமாகும். அதுமட்டுமின்றி ரஞ்சன்குடி கோட்டை, சாத்தனூர் கல்மரம், மயிலூற்று அருவி, சோழகங்கம் ஏரி என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களும் இங்கு அமைந்துள்ளன. மேலும் ‘லாடபுரம்’ என்ற பகுதியில் பஞ்சபாண்டவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இன்றும் இருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!