Perambalur

News January 24, 2025

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு

image

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர்களுக்கு ஜன.29-ம் தேதியும், மருந்தாளுநர்களுக்கு பிப்.4-ம் தேதியும் ஆட்சேர்ப்பு முகாம் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜாஸ் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://agnipathvayu.cdac.in/ என்ற இணையத்தை அனுகலாம். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

பிரம்மதேசம் : இறந்தவரின் உடலுறுப்புகள் தானம்

image

வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த, செந்தில்குமார்(35), என்பவர், சென்னையில் காஸ் சிலிண்டர் லாரியில் பணியாற்றி கொண்டிருக்கும் போது, தவறி விழுந்ததனால், நேற்று (22.01.2025) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது பெற்றோர் சம்மதத்துடன் இறந்தவரின், உடல் உறுப்புகள் (கிட்னி,லிவர், தோல்)தானம் செய்யப்பட்டது. அரசு தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

News January 23, 2025

பெரம்பலூரில் இயக்குநர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லக்ஷ்மி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (23.01.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News January 23, 2025

பெரம்பலூர்: விமானப்படையில் பணியாற்ற அழைப்பு

image

இந்திய விமானப்படையால் நடத்தப்படவுள்ள அக்னிவீர் வாயு தேர்விற்கான ஆட்சேர்ப்பு முகாம் 28.01.2025 முதல் 06.02.2025 வரை, கேரள மாநிலம், கொச்சி,எர்ணாகுளத்தில் நடைபெறவுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு http://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக அறியலாம்.விமானப்படையில் பணியாற்ற விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 23, 2025

பேருந்து வழித்தடங்கள் நீட்டிப்பு செய்த அமைச்சர்

image

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜமீன் பேரையூர், தெரணி மற்றும் கொட்டரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக பேருந்து வழி தடங்களை நீட்டிப்பு செய்து, கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரம்பலூர்- குரும்பபாளையம் நகரப் பேருந்து கொட்டாரை, ஆதனூர் வரை நீட்டிப்பு செய்தும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து சேவை நேற்று தொடங்கி வைத்தார்.

News January 23, 2025

ஜல்லிக்கட்டு குறித்து கலெக்டர் அறிவுறுத்தல்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் விழாக்குழுவினர் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான அனுமதி கோரும் விண்ணப்பங்கள் விழா நடத்த உத்தேசிக்கப்பட்ட நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக www.jallikattu.tn.gov.in என்ற முகவரியில் இணைய வழியாக விண்ணப்பித்து பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளார்.

News January 22, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும் ஊராட்சியில் இதர பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

பெரம்பலூர்:ஆட்சியரகத்தில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

image

ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அலுவலர்கள் மற்றும் விழா அமைப்பாளர்களுக்கு விளக்கும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (22.1.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News January 22, 2025

குன்னம் : உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்

image

“உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் குன்னம் வட்டத்திற்குட்பட்ட, துங்கபுரம் ஊராட்சியில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குழந்தைகள் நல மையம், சமையற் கூடம், துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இன்று (22.01.2025), மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு செய்தார்.

News January 22, 2025

பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்

image

குன்னம் தொகுதி,ஆலத்தூர் ஒன்றியம்,கூடலூர் ஊராட்சியில் அமைந்துள்ள “தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு”, தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான சிவசங்கர் இன்று (22.01.2024) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!