India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டத்தில் (25.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <

பெரம்பலூர் மக்களே தொடர்ந்து வேலை தேடுபவரா நீங்கள்? உங்களை தேடி வரும் Bank வேலையை மிஸ் பண்ணாதீங்க! பேங் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் செப்டம்பர் மாதத்திற்கான வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (26/09/2025) காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள் வேளாண்மை தொடர்பான தங்கள் குறைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் கூட்டத்தில் தெரிவித்து, அதற்கான தீர்வுகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (செப்.25) வேப்பதட்டை வட்டம் தொண்டமதுறை தூய பவுல் நல வாழ்வு மையத்திலும் மற்றும் கூத்தூர் அரசு உயர் நிலை பள்ளியிலும் தமிழக அரசின் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில், பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளிக்கலாம். மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான BEL நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள மின் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்; மின்கம்பிகள் சாய்ந்தும், அருந்தும் கிடந்தாள் அதை தொடாமல் உடனடியாக மின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்; பொதுமக்கள் எவரும் மின் துண்டிப்பை சரி செய்யக்கூடாது என்று பொதுமக்களுக்கு பெரம்பலூர் மாவட்டம் மின்வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் நேற்று (செப்.24) போலீசார் சோதனை நடத்தினர். அதில், கீழப்பெரம்பலூர் கிராமத்தில் ஆபர்ணம் (50) என்பவர் தனக்கு சொந்தமான மளிகைக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆபர்ணத்தை கைது செய்து அவரிடமிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று (செப்.24) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பேசிய போது, “வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள் மழை மானிகளை தணிக்கை செய்து; அதன் செயல்பாடுகள் குறித்த அறிக்கை அனுப்ப வேண்டும்.” என அறிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் (24.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.