India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டி 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ; 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ நெடுந்தூர ஓட்ட போட்டியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, பெரம்பலூர் MLA பிரபாகரன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

பெரம்பலூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதற்கு <

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருவளக்குறிச்சியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(32). லாரி டிரைவரான இவர் நேற்று அதிகாலை திருவளக்குறிச்சியில் இருந்து ஜல்லி ஏற்றுவதற்காக இரூர் பகுதியில் உள்ள கிரஷருக்கு லாரியை ஓட்டிச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் நாளை மறுநாள் (28-09-2025) குரூப் 2, 2A தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை மாவட்டத்தில் 5,478 மாணவர்கள் எழுத உள்ளதாகவும், தேர்வை கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் தலைமையில் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருனாளினி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் (26.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தவிருக்கும் போட்டித் தேர்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று (செப்.26) மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தேர்வு மையங்களின் தயார்நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்வுப் பணிகளைச் சீராக மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஸ்டான் போர்டு பல்கலைக்கழகம் உலகின் தலைச் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல் சமீபத்தில் வெளியிட்டது. அப்பட்டியலில் தொடர்ந்து ஆறாவது முறையாக பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் முதல்வர் K.ரவிச்சந்திரன் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு, பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அ.மேட்டூரை சேர்ந்த பள்ளி மாணவிகள் தினந்தோறும் பள்ளிக்குச் செல்வது வழக்கம். அப்போது அதே ஊரைச் சேர்ந்த தங்கதுரை மகன் கௌதமன் மாணவிகளை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் கொதமணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9488018205) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Sorry, no posts matched your criteria.