India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள திருமாந்துறை கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜன.17) அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பைச் சேர்ந்த 5 பேரின் வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2025-26-ம் நிதி ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி, திட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும், ஆகையால் இந்த முறை பட்ஜெட்டில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கி, புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த உங்கள் கருத்து என்ன?
பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகம். அருகில் உள்ள மாவட்டங்களான சேலம் மற்றும் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு செல்வதற்கு பேருந்து நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆகையால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் மாவட்டத்திற்குள் ஒரு ரயில் போக்குவரத்து வேண்டும் என கோரிகையை முன்வைத்துள்ளனர். இது பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் காளைகளை அடக்க சென்று பாதிக்கப்படும் இளைஞர்களுக்கு, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி விழா குழுவினர் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாடுகளுக்கும் சேர்த்து இன்சூரன்ஸ் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி நீங்க என்ன சொல்லுரிங்க கமாண்ட் பண்ணுங்க.
பெரம்பலூர் மாவட்டத்தில் காணும் பொங்கலான இன்று பெரும்பாலான இடங்களில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடுவர் என்பதால் மக்கள் கூடும் இடங்களில போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு, குற்றங்கள் நடக்காமல் இருக்க பொதுமக்கள் கவனமாக இருக்க போலீசார் எச்சரித்தனர்.
வாலிகண்டபுரத்தில், 1125 ஆண்டுகள் பழமையான வாலீஸ்வரர் கோயில் உள்ளது, ஆதித்த சோழன் காலத்தில் கற்களாக புனரமைக்கப்பட்ட இந்த கோயில், பல சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டு, விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. வானர அரசன் வாலி, இவ்வாலய சிவ பெருமானை வணங்கிதான் தனிடம் மோதும் எதிராளியின் பலத்தில் பாதி தனக்கு கிடைக்கும் வரம் பெற்றதாக இக்கோயிலில் ஐதீகம் உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பர்மா மற்றும் இலங்கையில் இருந்து நாடு திரும்பிய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுக் கடன், அடமான பத்திரங்கள், கடவுச்சீட்டு வைத்து கடன் பெறப்பட்ட நபர்களுக்கு கடன்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து பத்திரங்கள், ஆவணங்களையும் திருப்பி ஒப்படைக்க அரசு நெறிமுறை, ஆட்சியர் தலைமையில் வழிகாட்டியுள்ளது. அதன்படி சார் ஆட்சியரை அணுகி தகவல்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், காரியானூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன் (35). இவா், பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவரது கடையின் பூட்டை உடைத்து, ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள், ரூ.9 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது நேற்று (ஜன.13) தெரியவந்தது. தற்போது இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் நடந்த லெமன்&ஸ்பூன் போட்டியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்டியரும் பங்கேற்று அதில் முதலிடம் பிடித்தார். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய இந்த பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அரசு அலுவலர்களுடன் கலந்துகொண்டு மாவட்ட அரசு ஊழியர்களுக்கு பரிசுகளும் இனிப்புகளும் வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
பெரம்பலூர் பாலக்கரையில் 36ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு பெரம்பலூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், எஸ்.பி ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து,பொதுமக்களுக்கு சாலை விதிகள் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வுதுண்டு பிரசுரங்களை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.