Perambalur

News October 19, 2025

பெரம்பலூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் வருகிற அக்.24ம் ஆம் தேதி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன விற்பானி அலுவலகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News October 19, 2025

பெரம்பலூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 16 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 19, 2025

பெரம்பலூர்: ரூ.10 மானியம் – ஆட்சியர் அறிவிப்பு

image

வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண்மை பொறியல், வேளாண்மை வணிகம் மற்றும் கால்நடைத்துறைகளில் தொழில்திடங்க அரசு ரூ. 10 லட்சம் மானியம் வழங்குகிறது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேளாண் வளாகத்தில் அமைந்து வேளான் வணிகத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News October 19, 2025

பெரம்பலூர்: மூதாட்டியிடம் 6½ சவரன் தங்க நகை பறிப்பு

image

அரியலூரை சேர்ந்தவர் சுசிலாதேவி(65), இவர் தனது மகன்களான ஆனந்த்(33), சரவணன்(32) ஆகியோருடன் பெரம்பலூருக்கு வந்துள்ளார். அப்போது, அணுகுசாலை சக்தி நாகரில் சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சுசிலாதேவியிடம் 6½ சவரன் தங்க சங்கிலையை பறித்து சென்றுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, CCTV காட்சி மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றன்ர்.

News October 19, 2025

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.18) இரவு 10 மணி முதல் இன்று (அக்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News October 18, 2025

பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் <>Drug Free Tamil Nadu App<<>> என்ற செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

பெரம்பலூர்: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

பெரம்பலூர்: தீபாவளி ஆஃபர்-மக்களே உஷார்!

image

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

News October 18, 2025

பெரம்பலூர்: இடை நின்ற மாணவன் பள்ளியில் சேர்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு முடித்த கவி கிருஷ்ணா என்ற மாணவன் படிப்பை தொடராமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மாணவனை சப்-இன்ஸ்பெக்டர் மார்க் ரேட் மேரி, மருதமுத்து ஆகியோர் இணைந்து மாணவனை பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு சேர்த்து கல்வியை தொடர ஆலோசனை வழங்கினர்.

error: Content is protected !!