India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி (ம) மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சி என பெற தகுதி உள்ளவர்கள் www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்யலாம் மேலும் தகவலுக்கு 9445029470 எண்ணை அழைக்கலாம் என ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே எம் ஜி ஆர் நகர் பகுதியில் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (30) என்ற ஆண் ஒருவர் வாடகை குடியிருப்பு வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக இறந்து கிடந்தார். தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய நிலையில், மது போதையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வருகிறது.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நாளை (19.3.2025) நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் 19.3.2025 அன்று நடைபெற உள்ளது பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து,பொதுமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், தெரிவிக்கும் வகையிலான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை இன்று (17.03.2025) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் <
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பூதியம் வழங்கப்பட்டு வரும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் மார்ச்-23 ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தைச் சேர்ந்த செல்லம்(48) என்பவரது மகன் அகிலன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விபத்தில் மரணம் அடைந்த நிலையில், மகன் இறந்த துக்கம் தாங்காமல் செல்லம் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், நேற்று முன்தினம் இரவு விஷம் அருந்தி செல்லம் தற்கொலை செய்துள்ளார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செட்டிகுளம் கிராமத்தில் சுரேஷ் – 50 லாரி டிரைவர் இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என தெரிகிறது. இந்நிலையில் செட்டிகுளத்தில் உள்ள அவரது வயலுக்கு அருகே பூச்சிகொல்லி மருந்து குடித்து சுரேஷ் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இன்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
தாட்கோ மூலம் பி.எஸ்சி, எம்.எஸ்சி நர்சிங்; போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நர்சிங் மற்றும் பொது செவிலியர் ஆகிய மருத்துவ படிப்புகளில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் சேர தாட்கோ <
Sorry, no posts matched your criteria.