Perambalur

News March 20, 2024

‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.

News March 19, 2024

பெரம்பலூர்: ஜக்கம்மா சொல்ற.நல்ல காலம் பொறக்குது

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை பெரம்பலூர் துறை மங்கலம் பகுதியில் பெரம்பலூர் நகர செயலாளரும், எம்.எல்.ஏவுமான பிரபாகரன் தலைமையில் திமுக சார்பில் தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து நல்ல காலம் பொறக்கிறது ஜக்கம்மா சொல்கிறார் திமுகவிற்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்தனர்.

News March 19, 2024

பெரம்பலூர்: நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து, இன்று தலைமை பேச்சாளர் சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பைக்காரர் வேடம் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பெரம்பலூர் அடுத்த துறைமங்கலத்தில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 18, 2024

பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் 2024 -ல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை அதிக அளவில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திறனுள்ள முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அரியலூர் என்ற அலுவலகத்தை நேரில் அணுகலாம் என  ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News March 18, 2024

பெரம்பலூரில் களமிறங்கும் திமுக!

image

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தர் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இவர் பாஜகவில் இணைந்துள்ளதால், திமுக சார்பில் இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

News March 18, 2024

பெரம்பலூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணும் மைத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான க.கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளாதேவி ஆகியோர் இன்று(மார்ச் 17) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News March 16, 2024

பெரம்பலூர்: பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

image

பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபாலசாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா இன்று மங்கள வாத்தியம் முழங்க, பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கோவிந்தராஜ், முன்னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன் உட்பட பலர் செய்திருந்தனர்.

News March 16, 2024

பெரம்பலூர்: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!

image

பெரம்பலூர் வட்டம், செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாம்பாடி எனும் குக்கிராமம் பெரம்பலூருக்கு மிக அருகில் இருந்தபோதிலும், சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கிராமத்திற்கு அரசு போக்குவரத்து வழித் தடம் இல்லை. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று(மார்ச் 16) பாலாம்பாடி கிராமத்தில் இருந்து பெரம்பலூருக்கு புதிய போக்குவரத்து வழித்தடத்தை எம்எல்ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

News March 16, 2024

பெரம்பலூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு

image

பெரம்பலூர் அடுத்த எளம்பலூர், கவுல்பாளையம் ஆலாம்பாடி, நொச்சியம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் இருந்து ஒரு சில பகுதிகளை பெரம்பலூரில் இணைத்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று(மார்ச் 15) எளம்பலூர் ஊராட்சி தலைவர் சித்ராதேவி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News March 16, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 21 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37 . கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!