Perambalur

News April 6, 2024

குழந்தைக்கு பெயர் சூட்டிய விசிக தலைவர்

image

பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய காந்தி சிலை அருகே இன்று காலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது விசிக நிர்வாகியான துறைமங்கலம் வழக்கறிஞர் மணிமாறன் – பிரியதர்ஷினி ஆகியோரது பெண் குழந்தைக்கு வெற்றிச்செல்வி என பெயர் சூட்டினார்.

News April 6, 2024

பெரம்பலூர்: பதற்றமான சாவடிகள் எண்ணிக்கை வெளியீடு

image

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 55 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என எதுவும் இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2024

அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

image

மக்களவை பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இன்று(ஏப்ரல் 06) பெரம்பலூர் தலைமை அஞ்சலம் அருகே நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

News April 5, 2024

பெரம்பலூர் அருகே விபத்து

image

பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை செங்குணம் பிரிவுசாலை அருகில் நேற்று (ஏப்ரல் 4) திருவண்ணாமலையிலிருந்து திருச்சி எடுத்துச் சென்ற 11ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் ஏற்றி வந்த மினி வேன் பின் டயர் வெடித்து ஓட்டுநரை கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த கல்வி அலுவலர் ஓட்டுனரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 17 முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 5, 2024

பெரம்பலூர் அருகே ரூ.80,000 பறிமுதல்

image

பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.80,000 பறிமுதல் செய்யப்பட்டது. அல்லிநகரம் அருகே வட்டாட்சியர் தேன்மொழி தலைமையிலான குழுவினர் நேற்று(ஏப்.4) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஷாபருல்லா என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.80,000 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அப்பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News April 5, 2024

வேப்பூர் அருகே விழிப்புணர்வு பேரணி

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட அசூர கிராமத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே நேற்று(ஏப்.4) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் நேற்று மாலை 5 மணி அளவில் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

News April 4, 2024

பெரம்பலூர்: 340 மது பாட்டில்கள் பறிமுதல்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தணிக்கை குழுவினர் இன்று(ஏப்.3) காலை பெரம்பலூர் வட்டம், அம்மாபாளையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் அரசு மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து தணிக்கை குழுவினர் உடனடியாக ரூ.51,000 மதிப்பிலான 340 மதுபாட்டில்களை கைப்பற்றினர்.

News April 4, 2024

பள்ளி மாணவர்களின் நலன் காக்க..!

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

பெரம்பலூர்: எம்எல்ஏ வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை

image

மக்களவைத் தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் அரசு தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று(ஏப்.3) பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பறக்கும் படையினர் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். எம்எல்ஏ, அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என தகவல்.

error: Content is protected !!