India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றும் பணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம், பெயர், சின்னங்களுடன் கூடிய வேட்பாளர் பட்டியல் பதிவேற்றும் பணிகளை பெரம்பலூர் மக்களவைத் தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் நேற்று ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட நக்கசேலம் பகுதியில் (ஏப்ரல் 9) நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில், மத்திய துணை காவல் படையினர் மாவட்ட காவலர்களுடன் இணைந்து கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
மக்களவைத் தோ்தல் விதிகள் கடந்த 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக முதல் தளத்தில், 24 மணி நேரமும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை தொலைபேசி மூலமாக 19 புகாா்களும், சி-விஜில் செயலி மூலமாக 7 புகாா்களும் பெறப்பட்டு, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் உடனுக்குடன் தீா்வு காணப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் புறவழி சாலையில் இன்று காலை 10:50 மணியளவில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லாமல் ஓட்டுநர்கள் உயிர் தப்பினர். விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திரமனை கிராம பொதுமக்களிடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், நேற்று(ஏப்.8ம் தேதி) மாலை 4 மணி அளவில் மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பகுதியில் நேற்று(ஏப்.7), மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மத்திய துணை காவல் படையினர், காவல் கண்காணிப்பாளர் ஹேம் ராம் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பழனிச்சாமி தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காவலர் புரமோத் குமார் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வந்தார். இவர் ஏப்.3 அன்று பேருந்தில் இருந்து இறங்கி நடந்து வந்தபோது, பின்னால் சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த பைக் புரமோத்குமார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. காயமடைந்த புரமோத் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை, அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்ற வழக்குகள், வழங்கப்பட்ட குற்றத்தண்டனை, சொத்துமதிப்பு, கல்வித்தகுதி போன்ற முழுதகவல்களையும் தெரிந்துகொள்ள <
பெரம்பலூர் நகரம், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் நேற்று(ஏப்.6) மாலை 6:30 மணி அளவில், சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஈசன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.