India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று (அக்.22) மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்றுக்கொண்டார். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 11 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 2623 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech
3. கடைசி தேதி : 06.11.2025
4. சம்பளம்: ரூ.8,200 – 12,300
5. வயது வரம்பு: 18 – 24 (SC/ST – 29, OBC – 27)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க

பெரம்பலூர், மாவட்ட கலெக்டர் மிருணாளினி பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விடுத்துள்ள அறிவுரையில், டெங்கு, மலேரியா, மற்றும் டைபாய்டு காய்ச்சல் பரவாமல் இருக்க குடிநீரை கொதிக்க வைத்து பருக வேண்டும், வீட்டினை சுற்றிலும் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும், மேலும் மழைநீர் தேங்காத வண்னம் பார்த்துக் கொள்ள வேண்டும், மழை நீர் தேங்கும் பொருட்களை அகற்ற வேண்டும்.

பெரம்பலூர் மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதி, கெட்டுப்போன, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், வாங்கிய பொருளின் Bill-யை வைத்து சட்டப்படி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் உரிய இழப்பீடு பெற முடியும். இதனை அனவருக்கும் SHARE பண்ணுங்க. விழிப்புணர்வுடன் இருங்கள்!

வங்கக்கடலில் உருவாங்கியுள்ள புயல் சின்னத்தின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மிருணாளினி உத்தரவிட்டுள்ளார். SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு (அக்.20) ஒருநாள் மட்டும் இரு மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் ரூ.5,06,29,900க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் விற்பனை மழையால் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது, வீடுகள் சேதமடைவது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

பெரம்பலுர், கிருஷ்ணாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் (22.10.2025) நடைபெற இருப்பதால், கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், வெங்கலம், தழுதாழை, உடும்பியம், தொண்டப்பாடி, வெண்பாவூர், விசுவக்குடி, ஈச்சங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை, மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.