Perambalur

News September 3, 2025

பெரம்பலூர் மாவட்டம் பற்றிய தகவல்!

image

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
▶️ மொத்த பரப்பளவு: 1,757 ச.கி.மீ
▶️ மொத்த மக்கள்தொகை: 565223
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 2
▶️ பாராளுமன்ற தொகுதி: 1
▶️ வருவாய் கிராமங்கள்: 152
▶️ கிராம பஞ்சாயத்துக்கள்: 121
▶️ ஊராட்சி ஒன்றியங்கள்: 4
▶️ வட்டங்கள்: 4
▶️ கோட்டங்கள்: 1
▶️ பேரூராட்சிகள்: 4
▶️ நகராட்சிகள்: 1
▶️ இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News September 3, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தலைமையில் (11.09.2025) அன்று ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதில் சிறுபான்மையின மக்களுக்கென தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளதாக கூறியுள்ளார்.

News September 3, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 3.9.2025 முதல் 19.9.25 வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அலிம்கோ நிறுவனத்தால் நடத்தப்படும் மதிப்பீட்டு முகாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பங்கு பெற்று தனக்கு தேவையான உதவி உபகரணங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இம்முகாம் இன்று வி.களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 2, 2025

பெரம்பலூர்: Bus-ல சில்லறை வாங்க மறந்துட்டீங்களா? Don’t Worry

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க!

News September 2, 2025

பெரம்பலூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் மானியம்

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. <<17592996>>(பாகம்-2)<<>>

News September 2, 2025

பெரம்பலூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

image

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!

News September 2, 2025

பெரம்பலூர்: ரூ.35,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

தேசிய அளவில் வங்கிகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும் இப்பணியிடங்களுக்கு 21.09.2025 தேதிக்குள் இங்கே <>கிளிக் செய்து<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 2, 2025

ரூ.18,38,290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நேற்று (செப்.01) மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு சுமார் ரூ.18,38,290 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

News September 2, 2025

பெரம்பலூர்: புதிய கலெக்டரின் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கும் வரும் இன்று (செப்.03) முதல் தொடங்கி 28 நாட்களுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்களது பசு மற்றும் எருமைகளுக்கு தவறாமல் இந்த தடுப்பூசியினை போட்டுக்கொண்டு தங்கள் கால்நடைகளை கொடிய கழலை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும்படி பெரம்பலூர் கலெக்டர் மிருணாளினி அறிவித்துள்ளார். இதை ஷேர் பண்ணுங்க…

News September 2, 2025

கழலை நோய் தடுப்பூசிப் பணி நாளை முதல் தொடக்கம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கும் வரும் 3.09.2025 அன்று முதல் தொடங்கி 28 நாட்களுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்களது பசு மற்றும் எருமைகளுக்கு தவறாமல் இந்த தடுப்பூசியினை போட்டுக்கொண்டு தங்கள் கால்நடைகளை கொடிய நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!