Perambalur

News April 9, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதி 15ன் படி தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். அப்படி தமிழில் பெயர்ப் பலகை வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது உறிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார். கடைகள் வைத்துள்ள உங்க நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க

News April 8, 2025

அருண் நேரு வீட்டில் அதிகாரிகள் சோதனை

image

கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான அருண் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் அவரது மகன் அருண் நேருவுக்கு சொந்தமான  நிறுவனம், அவரது வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

News April 8, 2025

குழந்தை வரன் தரும் அருள்மிகு மதுரகாளியம்மன் அம்மன்

image

பெரம்பலூர்,சிறுவாச்சூர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவில். இங்கு நினைத்ததை வேண்டி அம்மனுக்கு மாவிளக்கு ஏத்தி, அபிஷேகம் செய்தால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். சித்திரைபவுர்ணமி, கார்த்திகைதீபம் போன்றவை இங்கு மிக சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. இங்கு வந்து வேண்டினால் கல்யாண பிரச்சினை, குழந்தை பிரச்சனை,குடும்ப பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News April 8, 2025

பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 அன்று, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் பங்குபெறும் இம்முகாமில், 10ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்கள்)

News April 7, 2025

பெரம்பலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 25 அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று தெரிவித்துள்ளார்.

News April 7, 2025

பெரம்பலூரில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் காப்பீட்டு ஆலோசகர் (Insurance Advisor) பணிக்கான 50 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்..

News April 7, 2025

பெரம்பலூரில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Insurance Agent)உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 7, 2025

பெரம்பலூரில் கணவரை கொலை செய்த மனைவி கைது

image

கோனேரிபாளையம் கிராமத்தை சேர்ந்த தம்பதினர் பெரியசாமி, சுகந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பெரியசாமி குடிபோதையில் மனைவி சுகந்தியிடம் பிரச்னை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சுகந்தி, அவரது தந்தை சுந்தர்ராஜ், தம்பி சுரேஷ் ஆகியோர் பெரியசாமியை இரும்பு கம்பி (ம) மரக்கட்டையால் தாக்கியதில் பெரியசாமி உயிரிழந்துள்ளார். போலீசார் அந்த மூவரையும் கைது செய்தனர்.

News April 6, 2025

பெரம்பலூரில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரீடைல் சேல்ஸ் அசோசியேட் பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு முடித்தவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்..

News April 5, 2025

பெரம்பலூர்: குழந்தை வரம் அருளும் தண்டாயுதபாணி

image

பெரம்பலூர், செட்டிகுளம் எனும் கிராமத்தில் அருள் மிகு தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இங்கு பிள்ளைபேறு வேண்டுவோர் சஷ்டியில் விரதம் இருந்து மலைமீதுள்ள தலவிருட்சமான வில்வமரத்தில் தொட்டில்கட்டி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மலையேறி தங்கள் வேண்டுதலை நிறைவு செய்கின்றனர். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்

error: Content is protected !!