Perambalur

News April 30, 2024

பெரம்பலூர்: விருது பெற விண்ணப்பிக்கலாம்!

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இதற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in தளத்தில் மே 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

பெரம்பலூர் அருகே தோராட்டம்!

image

பெரம்பலூர் எசனை ஸ்ரீகாட்டு மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்றது. இதில் அக்னி சட்டி மற்றும் அழகு குத்துதல் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும், இன்று(30ஆம் தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மன் அருள் பெற்று எசனை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மக்கள் முடி காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

News April 29, 2024

இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்

image

தமிழகக் கட்டிட அமைப்புச்சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் பெரம்பலூர் வட்டம், சத்திரமனை கிராமத்தில் இன்று
இலவச சட்ட விழிப்புனர்வு முகாம் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரசு மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர் குறித்து எடுத்துரைத்து பேசினார்.
இதில் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News April 29, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் வெயில்

image

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களுக்கு 4 நாட்கள் அதிகமாக வெப்பம் தாக்கக் கூடும் என்பதால் மஞ்சள் அலார்ட் விடுத்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உச்சி வெயில் நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

News April 29, 2024

பெரம்பலூர் சிறப்பு வாய்ந்த ரஞ்சன்குடி கோட்டை!

image

பெரம்பலூரில் அமைந்துள்ள கிபி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரஞ்சன்குடிகோட்டை விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. பின் ஆற்காடு நவாப் வழி வந்தவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கற்கோட்டையான இதில் 3 அடுக்கு அரண்களும், மாளிகை, குடியுருப்பு கட்டடங்கள், மசூதி, சுரங்க அறைகள் ஆகியவை உள்ளன.

News April 29, 2024

பெரம்பலூர் சிறப்பு வாய்ந்த ரஞ்சன்குடி கோட்டை!

image

பெரம்பலூரில் அமைந்துள்ள கிபி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரஞ்சன்குடிகோட்டை விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. பின் ஆற்காடு நவாப் வழி வந்தவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கற்கோட்டையான இதில் 3 அடுக்கு அரண்களும், மாளிகை, குடியுருப்பு கட்டடங்கள், மசூதி, சுரங்க அறைகள் ஆகியவை உள்ளன.

News April 29, 2024

பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் வேலை!

image

பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் 7 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

வேப்பந்தட்டை அருகே பைக் எரிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மாவிலங்கை கிராமத்தில் சின்னச்சாமி என்பவரின் குடும்பத்தினர் விவசாய தோட்டத்தில் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று(ஏப்.28) காரில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பு நின்ற பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துச் சென்றனர். சம்பவம் குறித்த புகாரில் பேரில் கை களத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News April 28, 2024

மாற்றுத்திறனாளி வீரர் அசத்தல்

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் திருக்களம்பூர், அண்ணா நகர் கிராமம் பூச்சொரிதல் திருவிழா முன்னிட்டு திருக்களம்பூர் விளையாட்டு மைதானத்தில் இன்று மது ஒழிப்பு விழிப்புணர்வுக்கான 5 கி.மி தொலைவுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பெரம்பலூர் வட்டம் மேலப்புலியூர் மாற்றுதிறனாளி நபர் எஸ்‌‌.கலைச்செல்வன் பங்கேற்று தமது திறமையை வெளிப்படுத்தினார்

News April 28, 2024

பெரம்பலூர்: சிறப்பு சலுகைகள்

image

பெரம்பலூர் நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 2023 விதி 268(2) இன் படி கால கெடுவுக்குள் வரி செலுத்துவோர் 2024-25 ஆண்டிற்கான அரையாண்டு சொத்து வரியை (ஏப் 30 )தேதி (ம) இரண்டாவது அரையாண்டு சொத்து வரியை (அக் 31) தேதிக்குள் கணினி வழியில் செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை 5 % சலுகை பொதுமக்களுக்கு வழங்கப்படும் என பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!