Perambalur

News May 3, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பெரம்பலூர் மாவட்ட, தாலுகா வாரி பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள்9642422022 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

News May 3, 2024

வேப்பந்தட்டை: நீர் உறிஞ்சி கிணறுகள் ஆய்வு

image

பெரம்பலூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அயன் பேரையூர் அருகில் உள்ள வெள்ளாற்றில் அமைக்கப்பட்டு வரும் 3 நீர் உறிஞ்சி கிணறுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பொன்னையா மற்றும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஆகியோர் நேற்று(மே 2) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News May 2, 2024

நீர் உறிஞ்சி கிணறுகளை ஆய்வு

image

பெரம்பலூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன் பேரையூர் அருகில் உள்ள வெள்ளாற்றில் அமைக்கப்பட்டு வரும் மூன்று நீர் உறிஞ்சி கிணறுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் பொன்னையா மற்றும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News May 2, 2024

சீரான குடிநீர் வழங்குதல் தொடர்பாக ஆய்வு கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் இயக்குனர் பொன்னையா தலைமையில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News May 2, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூருக்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

News May 1, 2024

குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு

image

பெரம்பலூர், ஆலத்தூர் ஒன்றியம் T.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன்(45). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கால் தவறி விழுந்து இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

News May 1, 2024

வேளாண்மை கல்லூரி மாணவிகள் களப்பணி

image

பெரம்பலூர், குரும்பலூர் கிராமத்தில் (ஏப்.30) நேற்று திட்டக்குடி JSA வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் குழுவாக ஊரக வேளாண்மை பயிற்சியின் ஓர் பகுதியாக நெற்பயிருக்கு ஊட்டச்சத்து கரைசல் எவ்வாறு தயார் செய்து பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த உற்பத்தியைப் பெருக்க விவசாயிகளுடன் வயல்களில் செயல்முறை செய்து பயிற்சி மேற்கொண்டு களப்பணி செய்தனர்.

News May 1, 2024

பெரம்பலூர்: தீப்பிடித்து எரிந்த வீடு; நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் நேற்று(ஏப்.30)  முத்துச்சாமி-தங்கநிலவு தம்பதியின் குடிசைவீடு தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்தது. இதனை அறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், தம்பதியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர், து.செயலாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.

News April 30, 2024

மாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா

image

பெரம்பலூர் மாவட்டம் எசனை காட்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 30) காலை 10 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பார்ப்பாங்கரை , அனுக்கூர், அன்னமங்கலம் ,கோனேரி பாளையம், வேப்பந்தட்டை ஆகிய கிராமங்களில் இருந்து திரளாக கலந்து கொண்டு அக்னி சட்டி (ம) சாமி ஊர்வலம் செய்து தரிசனம் செய்து ஊர் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

News April 30, 2024

விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

image

2024-2025 ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளையாட்டு மையம் (ம) சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளதால் தகுதியுடைய மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தேர்வு மே 10, 11ம் தேதிகளில் பெரம்பலூரில் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. விடுதியில் மாணவர்கள் சேர்வதற்கு மே 8ம் தேதி வரை www.sdat.tn.gov.in விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!