India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியில் நேற்று(ஏப்.21) புதிதாக கட்டப்பட்ட மதுரை வீரன் சுவாமி திருக்கோயிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி சிறப்பு பூஜைகளுடன் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மலேசிய தொழிலதிபர் பிரகதீஷ் குமார் கலந்து கொண்டனர். சுற்றுவட்டார கிராமத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
பெரம்பலூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்திகேஸ்வரர் மற்றும் ஈசனுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகள், வாசனை திரவியுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் ரிஷப வாகனத்தில் ஈசன் எழுந்தருளி உட்பிரகாரம் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே காரை பிரிவு ரோடு அருகில் நேற்று மாலை(ஏப்.20), கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 92 மது பாட்டில்களை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக இருர் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமதலங்கள் ஆகிய அனைத்திற்கும் மகாவீரர் ஜெயந்தி (21.04.2024) (ஞாயிற்று கிழமை) மற்றும் மே தினம் (01.05.2024) (புதன் கிழமை) ஆகியவற்றை முன்னிட்டு மேற்படி இரண்டு நாட்களுக்கு உலர்தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான, ஆதவ் பப்ளிக் பள்ளியில் சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில், அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகம் ஆய்வு செய்து, அந்த அறை சீல் வைக்கப்பட்டது.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின் படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(ஏப்ரல் 19) அதிகபட்சமாக 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 81 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. இதனால் ஒரு சில இடங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலைகளாக காணப்பட்டது. இதனால் மக்களவைத் தேர்தலில் வயது முதிர்ந்த வாக்காளர்கள் வாக்கு சாவடிக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு நேற்று(ஏப்.19) நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 77.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. தொடர்ந்து, கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பெரம்பலூர் அருகே உள்ள ஆதவ் பப்ளிக் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கலெக்டர் கற்பகம் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் பொதுத் தேர்தல் 2024 இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 73 % வாக்குகள் பதிவாகியுள்ளது பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை, லால்குடி, முசிறி, மணச்சநல்லூர், துறையூர் (தனி) ,பெரம்பலூர் (தனி), வாக்கிய பகுதிகளிலும் வாக்குப்பதிவான வாக்கு பெட்டிகள் தேர்தல் அலுவலர்கள், காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு என்னும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!
பெரம்பலூர் ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவில் மற்றும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் உண்டியல் திறப்பு இன்று,
திருக்கோவில் ஆய்வாளர் தீப லட்சுமி முன்னிலையில் திறக்கப்பட்டது. திருக்கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் ரொக்கம் மற்றும் நாணயங்களை எண்ணினர்.
இதில் உண்டியலில் ரெக்கம், தங்கம், வெள்ளி உட்பட சுமார் மொத்த மதிப்பு 3,20,000 என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
Sorry, no posts matched your criteria.