India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில், மங்களமேடு EB – SS பழுதானதால் ஒரு வார காலமாக தண்ணீர் இறைக்க முடியாமல் காய்ந்த மக்காசோள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மக்காசோளம், கடலை பயிர்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பெரம்பலூர் மாவட்ட, தாலுகா வாரியாக பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் 96.44% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 95.51 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 97.37 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
பெரம்பலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, அரசு போக்குவரத்துக் கழக சிஐடியூ சங்கம் சார்பில் நேற்று(மே 5) வாயிற் கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் மகேந்திர குமாரை கண்டித்து வரும் 14ம் தேதி மேலாண் இயக்குநர் அலுவலகம் அருகில் நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டம் குறித்த விளக்க கூட்டம் நடைப்பெற்றது.
பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள பர்னிச்சர் கடையின் குடோனில் இன்று 12 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டில், டைனிங் டேபிள் சோபா, ஃபர்னிச்சர் வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இடத்திற்கு விரைந்து வந்த, தீயணைப்புத் துறை 2 மணி போராடி தீயை அனைத்து வந்தனர்.
பெரம்பலூர் வட்டம், துறைமங்கலம் தீரன் நகர் பகுதியில் சுமார் 75 வயதுடைய பெயர் மற்றும் முகவரியையும் சரியாக சொல்ல தெரியாத ஆதரவற்ற முதியவர் ஒருவரை நேற்று மாவட்ட சமூக நலத்துறை மூலம் மீட்டு
பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் மற்றும் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன், ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்ல நிர்வாகி அருண் ஆப்ரஹாம்,
உதிரம் நாகராஜ், மகேஸ்குமரன் ஆகியோர் உதவியுடன் சிறப்பு இல்லத்தில் சேர்த்தனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் (மே 3) நேற்று மாலை 6 மணி அளவில் திராவிட கழகத்தின் சுயமரியாதை நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டார். பொதுக் கூட்டத்தில் திராவிட கழகத்தின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள்( ம) தோழமைக் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில் நேற்று(மே 3) மாவட்ட அரிமா சங்கம் சார்பில் தலைவர் பாபு தலைமையில் சாசன தலைவர் இராஜாராம் முன்னிலையில் 5 ஜோடி மணமக்களுக்கு கூட்டு திருமண விழா நடைபெறுகிறது. பெரம்பலூர் ரோவர் கல்வி குழும தலைவர் வரதராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அரிமா சங்கம் செயலாளர்கள் சிவராஜ், சுப்ரமணியன், பொருளாளர் காசி விஸ்வநாதன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சாத்தனூருக்குக் கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இருக்கும் கடல், 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இவ்வூருக்கு மேற்கே 8 முதல் 10 கிலோ மீட்டர் வரையிலும் பரவியிருந்தாக புவியியல் கூற்றுப்படி தெரியவருகிறது. இதனால் கடலுக்கடியில் இறந்த உயிரினங்கள் புதைபடிவமாக மாறிப் போயின. பூக்கும் தாவரம் தோன்றுவதற்கு முந்தை காலத்தை சேர்ந்த 18 மீட்டர் நீளம் கொண்ட மரம் கல்லுருவமாகியுள்ளது.
பெரம்பலூர், கொளப்பாடி கிராமத்தில் சேர்ந்த நடராஜன்- சோலையம்மாள் தம்பதி. சோலையம்மானுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின் வலி தாங்க முடியாமல் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த கணவர் நடராஜன் துக்கத்தில் மருந்து குடித்து இறந்து விட்டார். இதனால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை செய்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.