India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
வேப்பந்தட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்த லோகநாதன்(68) வேப்பந்தட்டையில் சில்லி கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சைக்கிளில் சென்றார். அப்போது பூலாம்பாடியை சேர்ந்த பிரதீப்(28) என்பவர் அவ்வழியே டூவீலரில் வந்த போது லோகநாதன் மீது மோதினார். இதில் காயமடைந்த இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி லோகநாதன் உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் கவர்ப்பனையை சேர்ந்தவர் செல்வராஜ்(40). இவர் அங்குள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம்(மே 9) டூவீலரில் மனைவி ஜெயலட்சுமியுடன் மரவநத்தத்ததிற்க்கு சென்று கொண்டிருந்தார். நெய்க்குப்பை அருகே சென்றபோது கார் எதிர்பாராத விதமாக செல்வராஜ் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோடை காலத்தில் அதிகரித்துள்ள வெயில் கால்நடைகளின் ஆரோக்கியம் (ம) உற்பத்தி திறனில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் சுற்றுப்புற வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் (ம) ஈரப்பதம் 70% க்கு மேல் அதிகரிக்கும் போதும் வெப்ப அயற்சி ஏற்படுகிறது. எனவே கால்நடைத்துறை சார்பில் தெரிவித்துள்ளபடி கறவை மாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 50 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும் நிழலில் பராமரிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று(மே 10) வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று(மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட தேனூர், விராலிப்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை- 4 மணியளவில் திடீரென்று காற்றுடன் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .அண்மைகாலமாக 100-டிகிரிக்கும் அதிகமாக வெயில் சுட்டெரித்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 94.77 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பெரம்பலூர் வட்டம், செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்கள் அஜய், ராகுல், சந்தியா, மோகித பிரியன் ஆகியோர் கணித பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.73% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 88.62 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.44 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 9ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 94.77% தேர்ச்சி விகிதம் பதிவா மாநில அளவில் 8வது இடம் பிடித்துள்ளது. இதில் மாணவர்கள் 92.91% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.01% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.