Perambalur

News May 26, 2024

38 உரக்கடைகளுக்கு விற்பனை செய்ய தடை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் கௌதமன், அப்துல் ரகுமான் தலைமையில் 4 வேளாண் அலுவலர்களின் குழு (மே 23, 24) ஆகிய தேதிகளில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள 68 உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அஸ்ரீதில் உர கட்டுப்பாடு ஆணையை மீறிய 38 உரக்கடைகளுக்கு தடை விதித்தனர். ஆய்வில் பெரம்பலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

News May 26, 2024

அதிமுக பிரமுகர் தூக்கு போட்டு தற்கொலை

image

வேப்பந்தட்டை, விஜயபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (50). இவர் விஜயபுரம் அதிமுக கிளை கழக பிரதிநிதியாக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கண்ணன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கண்ணனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்

News May 26, 2024

தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்

image

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு பகுதியில் அண்மைக்காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும். இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரங்களில் தெருக்களில் நடப்பதற்கே அச்சமாக உள்ளதாகவும், இரவு நேரங்களில் பணிகளுக்குச் சென்று வருவதில் சிரமம் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

News May 26, 2024

திருஞானசம்பந்தர் குருபூஜை விழா

image

பெரம்பலூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நேற்று நாயன்மார்கள் மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் பல்வேறு வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து மங்கள வாத்தியம் முழங்க மகா தீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

News May 25, 2024

பெரம்பலூர் மாவட்ட இசைப்பள்ளியில் சேர்க்கை!

image

பெரம்பலூர் மாவட்ட இசைப் பள்ளியில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பள்ளியின் குரல் இசை, நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய பிரிவுகளில் சேர தமிழ் எழுத படிக்கத் தெரிந்தால் போதும். மற்ற பாடப்பிரிவுகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், தகவலுக்கு 94433 77570 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News May 24, 2024

மாவட்ட இசைப்பள்ளியில் சேர்க்கை – ஆட்சியர் தகவல்

image

பெரம்பலூர் மாவட்ட இசைப் பள்ளியில் ( 2024-25) ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பள்ளியின் குரல் இசை, நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய பிரிவுகளில் சேர தமிழ் எழுத படிக்கத் தெரிந்தால் போதும். மற்ற பாடப்பிரிவுகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், தகவலுக்கு 9443377570 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News May 24, 2024

சாலை விபத்தில் ஒருவர் பலி, இருவர் படு காயம்

image

பெரம்பலூர், செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த நவீன் சச்சின், தமிழ்வாணன், மூவரும் திருச்சி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நெடுங்கூர் என்ற இடத்தில் அரசு விரைவு பேருந்து மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த நவீன் ( 21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரையும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

News May 24, 2024

பெரம்பலூரில் மழைக்கு வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூரில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

குரூப்-IV தேர்வு குறித்த ஆய்வுக்கூட்டம்

image

ஜூன் -09 ஆம் தேதி நடைபெறவுள்ள TNPSC GROUP-IV தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தமாக இத்தேர்வு 61-மையங்களில் நடைபெற உள்ளதால் போதுமான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டம் என ஆட்சியர் தெரிவித்தார்.

News May 24, 2024

மருத்துவகல்லூரி தவறான தகவல்

image

தமிழகத்தில் பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது. இந்நிலையில், அத்தகவல் தவறானது என தமிழ்நாடு மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!