Perambalur

News June 26, 2024

போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்

image

TNPSC 2024-ம் ஆண்டு, TNPSC GROUP II & IIA தேர்வுக்காக 14 செப்டம்பர் 2024 தேதியில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போட்டித் தேர்விற்காக இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன்-28 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படவுள்ளது. இவ்வகுப்புகள் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நடைபெறும். இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள மா.நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

News June 26, 2024

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மாவட்டகாவல்கண்காணிப்பு அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சியாமளா தேவி தலைமையில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகாணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற மனு நாளில் நில பிரச்சனை, பணம் பிரச்சனை, சொத்துதகராறு போன்ற பிரச்சினைகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

News June 26, 2024

சிலிண்டர் வெடித்து தீ விபத்து

image

குன்னம், பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் முத்து(42). இவரது மனைவி பானுமதி (37) ஆகியோர் 2 குழந்தைகளுடன் நேற்று(25.6.24) மாலை சுமார் 6 மணியளவில் வெளியில் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து வீடு முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

News June 26, 2024

நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம்

image

கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். எனவே தகுதி உடைய நபர்கள் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறுமாறு ஆட்சியர் கற்பகம் நேற்று தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

நலத்திட்ட உதவிகள் பெற கலெக்டர் அழைப்பு

image

தமிழ்நாடு சீர் மரபினர் நல வாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இதில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி, இயற்கை மரண உதவிதொகை, ஈமச்சடங்கு செலவு, கல்வி, திருமணம், மகப்பேறு, முதியோர் ஓய்வூதியம் ஆகிவை வழங்கப்படுகின்றன. கலெக்டர் அலுவலக பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி பயனடையுமாறும் அறிவுறுத்தல்.

News June 26, 2024

தோட்டக்கலை துறை மூலம் தென்னங்கன்றுகள்

image

தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வேப்பந்தட்டை வட்டம் வெண்கலம் அரசு பண்ணையில் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு தேவையான காய்கறி பயிர் நாற்றுகள், பழகன்றுகள், தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தரமான தென்னங்கன்று உற்பத்தி செய்து தயார் நிலையில் உள்ளது. ஒரு கன்றுக்கு ரூ. 60 செலுத்தி விவசாயிகள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 26, 2024

பெரம்பலூர்: முக்கிய எண்கள் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் குறித்து தகவல் அறிந்தால் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் க.கற்பகம் நேற்று(ஜூன் 25) தெரிவித்துள்ளார். மாநில கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் – 10581, ஆட்சியர் – 94441 75000, காவல் துறையினரின் Whatsapp No. 790413 6038 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News June 25, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் குறித்து தகவல் அறிந்தால் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என இன்று (ஜூன்-25) கலெக்டர் க.கற்பகம் தெரிவித்தார். மாநில கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 10581, மாவட்ட ஆட்சியர் தொடர்பு எண் 94441-75000 என்ற எண்ணிற்கோ, காவல் துறையினரின் Whatsapp No. 790413-6038 என்ற எண்ணை அழைக்கலாம்.

News June 25, 2024

நான்காம் நாள் வருவாய்த் தீர்வாயம்

image

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 4-தாலுகாவிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) இன்று(ஜூன்-25) நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில்(தாலுகா வாரியாக) பெரம்பலூர்- 225 மனுக்களும், வேப்பந்தட்டை – 126 மனுக்களும், குன்னம் – 115 மனுக்களும், ஆலத்தூர் – 70 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன்- 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.

News June 25, 2024

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

image

பெரம்பலூர் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி, பவளக்கொடி தம்பதியினரின் மகள் நிகிதா(10). இவர் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனக்கு வயிறு வலிப்பதாக பள்ளி ஆசிரியரிடம் கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்தவர் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!