Perambalur

News June 18, 2024

பெரம்பலூர் வருவாய் தீர்வாயம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4-தாலுகாவிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இன்று (ஜூன்-18) நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் (தாலுகா வாரியாக) குன்னம்-107 மனுக்களும், வேப்பந்தட்டை -175 மனுக்களும், ஆலத்தூர்-48 மனுக்களும், பெரம்பலூர் – 51 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜூன்-20, 21,25,27 ஆகிய நாட்களில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. 

News June 18, 2024

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

image

பெரம்பலூரில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் தந்தை ரோவர் பள்ளி மாணவர்களின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. பெரம்பலூர் தந்தை ரோவர் பள்ளி வளைவில் தொடங்கிய இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

News June 17, 2024

வேளாண் கண்காட்சி நிறைவு

image

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற 3 நாட்கள் நடைபெற்ற வேளாண் கண்காட்சி (ஜூன் 16) நேற்றுடன் நிறைவடைந்தது. கண்காட்சியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள், ட்ரோன்கள், சிறுதானியம் உள்ளிட்ட பாரம்பரிய விதையுடன் விவசாயிகளுக்கு அரசு வழங்கப்படும் திட்டங்கள் கூடிய 150 அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. வேளாண் கண்காட்சியில் 30,000 பேர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

News June 17, 2024

பெரம்பலூர்: நாளை கரண்ட் கட் ஆகும் இடங்கள்!

image

பெரம்பலூர் கோட்டம் எசனை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை(ஜூன் 18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, திருப்பெயர்,செஞ்சேரி, கீழக்கரை, எசனை, மேட்டாங்காடு, புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

News June 16, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் தேதி அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 1433 ஆம் பசலிக்கான ஜமாபந்தி குன்னம் தாலுக்காவில் ஆட்சியர் தலைமையிலும் பெரம்பலூர் தாலுக்காவில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் , வேப்பந்தட்டை தாலுக்காவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுக்காவில் சார் ஆட்சியர் தலைமையிலும் வரும் ஜூன்18 முதல் ஜூன்27 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார். ‌‌

News June 15, 2024

குன்னம் அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

ஆலத்தூர் தாலுகா சடைக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (50) என்பவர் குன்னத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் ஒதியம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் ஒரு லாரியை முந்தி வந்த மற்றொரு லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த குன்னம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 15, 2024

களைகட்டிய ஆட்டுச் சந்தை விற்பனை

image

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை வாரம் தோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளது. இந்த ஆட்டுச் சந்தையில் பெரம்பலூர் சுற்றுவட்ட கிராமங்கள் மற்றும் திருச்சி, சேலம், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

News June 14, 2024

பெரம்பலூர் அருகே பாடாலூரில் விபத்து

image

பெரம்பலூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே டிப்பர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக நெடுஞ்சாலை மேல் அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை விழிப்புணர்வு டிஜிட்டல் பலகையில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News June 14, 2024

தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு

image

பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. இதில், ஆர்வமுள்ளவர்கள் <>https://pmfme.mofpi.gov.in/pmfme/#/Home-Page<<>> என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8925533977, 8925533978 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

பெரம்பலூர்: சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், தாலுகாகளுக்கு தனித்தனி கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது. அதன்படி,  பெரம்பலூர்- அருமடல், வேப்பந்தட்டை -பிம்பலூர் , குன்னம்-பெண்ணக்கோனம், ஆலத்தூர்-சில்லக்குடி என ஒதுக்கப்பட்டுள்ளது. முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான கோரிக்கை வைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!