India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், நவீன முறை சலவையகம் அமைக்க தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இத்திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஆக -02) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி ‘கல்வியும் காவலும்’ என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பொறுப்பு அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்றது. மாணவ மாணவிகளிடம் போதை பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
பெரம்பலூர் நகர் பகுதியின் கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாஅம்பாள் ஆலயத்தில் 108 சுமங்கலிகள் ஒன்றிணைந்து ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்குபூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர், குரும்பலூர், பாளையம், அரனாரை, துறைமங்கலம் நான்கு ரோடு உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறன், பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்ட கலெக்டர் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து அவர்களிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்வின் போது அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள் மூலப்பொருட்களுக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று தெரிவித்தார்.
பெரம்பலூர் நகரப் பகுதியில் வானொலி திடல் சாலையில் காலை முதல் மாலை வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பெரிய விபத்து நடப்பதற்கு முன்னரே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போன்ற ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் B.Com மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிமருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பெரம்பலூர் எஸ்பிஐ வங்கி கிளை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். பின்னர், மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உட்பட 90 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், துறைமங்கலம் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டு நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.
ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தில் உள்ள பயிர் வளாகத்திற்கு புதியதாக பொறுப்பேற்ற பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வருகை புரிந்து பயிர் வளாகத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு அங்குள்ள பணியாளர்களிடம் உரையாடினார். இந்நிகழ்ச்சியில் தேனூர் பஞ்சாயத்து அலுவலர்கள், பயிர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் தூர்வாரப்பட்டுள்ள நீர்நிலைகள் குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம், தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.