Perambalur

News July 28, 2024

பயிா் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

image

பெரம்பலூா் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் நடவு செய்யப்படும் பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ள மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். அதன்படி சின்ன வெங்காயம் மற்றும் தக்காளிக்கு ஆக.31ஆம் தேதிக்குள்ளும், வாழை, மரவள்ளி போன்ற பயிா்களுக்கு செப்.16ஆம் தேதிக்குள்ளும் அருகிலுள்ள வேளாண் அலுவலகத்தில் ரூ.884 முதல் ரூ.3,601 வரை செலுத்தி பயிா்க் காப்பீடு செய்யலாம் என தெரிவித்துள்ளார். SHARE IT

News July 28, 2024

பெரம்பலூர் சார் ஆட்சியர் ஆலோசனை

image

பெரம்பலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சார் ஆட்சியர் கோகுல் தலைமையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அரசு மற்றும் கிராம புறங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பசுமை தூதர், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், தேசிய பசுமை படை, மாவட்ட வன அலுவலக பிரதிநிதி, இந்தோ அறக்கட்டளை, துளிகள் அறக்கட்டளை என பல அமைப்புகள் பங்கேற்றன.

News July 28, 2024

செட்டிக்குளம் அருகே பணமோசடி வழக்கில் பெண் கைது

image

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 37 நபர்களை நம்ப வைத்து அவர்களின் பேரில் தனியார் நிதி நிறுவனங்களில் 39,10,880 ரூபாயை கடனாக பெற்றுக்கொண்டு ஏமாற்றிய அதேபகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு இன்று அனுப்பி வைத்தனர்.

News July 27, 2024

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி பெண் கைது

image

பெரம்பலூர், குன்னம் கிராமத்தை சேர்ந்த பொன்மனச்செல்வி என்பவரிடம் பெரம்பலூர் கலைநகரைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ.15 லட்சம் பெற்றுக் கொண்டு பணத்தை தராமல் ஏமாற்றி வருவதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், இன்று  முத்துலட்சுமியை கைது செய்தனர்.

News July 27, 2024

பெரம்பலூர் எஸ்.பி தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடி கட்டளைகளை நிறைவேற்றுவது மற்றும் ரவுடிகள் கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. காவல் ஆய்வாளர்கள், ரவுடிகள் கண்காணிப்பு குழு உதவி ஆய்வாளர்கள், நீதிமன்ற காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

News July 27, 2024

மாரத்தன் பந்தயத்தில் பெரம்பலூர் மாற்றுத்திறனாளி வீரர்

image

சிவகங்கை மாவட்டம், பொன்னாங்குடி கண்டராபாணிக்கம் நாட்டு புனித சவேரியார் ஆடி மாத சப்பர தேர் பவனி விழாவை முன்னிட்டு இன்று பொன்னாங்குடியில் சிவகங்கை மாவட்ட சைக்கிள் அசோசியேஷன் சார்பில் மாபெரும் சைக்கிள் மற்றும் மாரத்தான் பந்தயம் நடைபெற்றது. மாரத்தான் பந்தயத்தில் பெரம்பலூர் வட்டம் மேலப்புலியூர் மாற்றுதிறனாளிகள் வீரர் எஸ்.கலைச்செல்வன் பங்கேற்று 4 ஆம் இடம் பிடித்துள்ளார் .

News July 27, 2024

விவசாயிகளின் கோரிக்கைகளை தீர்க்க ஆட்சியர் உத்தரவு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள், நாய்களால் கால்நடைகள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், ஏரி மதகுகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் மற்றும் பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு விரைவில் நிவாரண இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News July 27, 2024

மத்திய அமைச்சரிடம் பெரம்பலூர் எம். பி கோரிக்கை

image

ஒன்றிய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர்
சிராக் பாஸ்வானை நேரில் சந்தித்தார். பெரம்பலூர் மாவட்ட விவசாய பெருமக்கள் பெருமளவு உற்பத்தி செய்யும்
சின்னவெங்காயத்தின் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலை மேம்படுத்த, பெரம்பலூர் மாவட்டத்தில் சேமிப்பு கிடங்குகளை நிறுவுவதற்கு பெரம்பலூர் தொகுதி எம். பி அருண்நேரு நேற்று (ஜூலை -26)கோரிக்கை வைத்தார்.

News July 26, 2024

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த வள்ளி என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சொத்திற்காக தனது தாய் மற்றும் சகோதரியை கொலை செய்தார். இந்நிலையில்  இரட்டை கொலை வழக்கில் குற்றவாளியான வள்ளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தண்டனை வழங்கி இன்று பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

News July 26, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெருந்திரளாக விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!