India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குன்னம் தாலுகாவிற்குட்பட்ட, முருக்கன்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (09.11.2024) மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது .இந்நிகழ்வில் துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர் தனது வாகனத்தை மறித்து ஓட்டுனரை தாக்கி விட்டு ரூ.10 லட்சம் பணத்தை திருடி சென்றதாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்தார். இந்நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் இலவச தடுப்பூசி 11.11.2024 முதல் 30.11.2024 வரை இலவசமாக கால்நடை மருந்தகங்களில் செலுத்தி பயன்பெறலாம். ஆடு வளர்க்கும் விவசாயிகள் உரிய விபரம் அளித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்
பெரம்பலூர் மாவட்டத்தில் தனிநபர் இல்லத்தில் நூலகத்தினை பராமரித்து வரும் புத்தக ஆர்வலர்கள் தங்களது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை அறிய நூல்கள் ஏதாவது இருப்பின் அதன் விபரம் எந்த ஆண்டு முதல் நூலகம் பராமரிக்கப்பட்டு வருகிறது என்ற விவரம் (ம) தங்களது பெயர் முகவரி கைபேசி எண்ணுடன் 20ஆம் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட நூலகத்திற்கு நேரில் அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் (9.11.2014) நாளை காலை 10.15 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட வடங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நடத்தப்படும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நாளை தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்கரையில் உள்ள திமுக அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகின்ற 15.11.2024 அன்று வருகை தரும் திமுக கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு பாதுகாப்பு குறித்து கழகத் துணைப் பொதுச்செயலாளர் எம்.பி. ஆராசா பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் எஸ்பி ஆதர்ஷ் பசேரா ஆகியோரிடம் நேற்று கலந்துரையாடினார். நிகழ்வில் எம்எல்ஏ பிரபாகரன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு கைம்பெண்கள் (ம) ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணி அளவில் பெரம்பலூர் அஸ்வின் பார்ட்டி ஹாலில் நடைபெறவுள்ளது. நிகழ்வுகளில் கலெக்டர், எம் எல் ஏ ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (நவ.8) நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைத்தீர்க்கும் முகாம் 9.11.2024 அன்று நடைபெற உள்ளது. பெரம்பலூர் வட்டம் கல்பாடி கிராமம் வேப்பந்தட்டை வட்டம் பிரம்மதேசம் கிராமம், குன்னம் வட்டம் பேரளி கிராமம், ஆலத்தூர் வட்டம் ஆதனூர் கிராமத்திலும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இடைநிலை பட்டய கணக்காளர், செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர், நிறுவன செயலாளர் ஆகிய போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற தாட்கோ மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தகுதியுடைய போட்டியாளர்கள் பயிற்சியில் சேர்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையத்தில் பதிவேற்றம் செய்து பயனடைய அறிவுறுத்தப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.