Perambalur

News August 9, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

ஆண்டுதோறும் சுற்றுலாத்துறையால் , சுற்றுலாத் தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலா தொழில் முனைவோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது . அதனடிப்படையில்
பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டின் சுற்றுலா விருதிற்க்கான விண்ணப்பங்கள் www.tntourismaward.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து 20.08.2024-க்குள் பதிவு செய்யும்படி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வருகிற செப்டம்பர் (ம) அக்டோபர் மாதங்களில் 5 பிரிவுகளின் கீழ் மாவட்ட மண்டல (ம) மாநில அளவில் நடைபெற உள்ளது எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள் sdat.tn.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் 7401703516 என்ற எண்ணில் தொடரலாம் என கலெக்டர் இன்று தகவல்.

News August 8, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், அம்மாபாளையம், எறையூர், பெருமத்தூர், கூத்தூர் ஆகிய கிராமத்தில் 10.08.2024 நடைபெற உள்ளது.
என ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு (B.Sc Computing Designing), (B.Com, BCA & BBA) படித்திட விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328 – 276317 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தையோ அணுகி உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவிப்பு.

News August 8, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 8, 2024

பெரம்பலூர் எஸ்பி மாற்றம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த ஷியாமளா தேவி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஆதர்ஷ் பச்சேராவை புதிய எஸ்பியாக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆதர்ஷ் பச்சேரா தற்போது திருநெல்வேலி துணை போலீஸ் கமிஷனராக இருந்து வருகிறார். அதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள், பல பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News August 8, 2024

பெரம்பலூர் எம்பி குற்றச்சாட்டு

image

பெரம்பலூர் எம்பி அருண் நேரு நேற்று, மத்திய அரசு மாநில அரசுகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு நிதி வழங்குவதில்லை. மேலும் மத்திய அரசு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கிறது. ஆனால் பெரும்பாலான இளைஞர்கள் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணிபுரிவதில்லை என்று நேற்று மக்களவையில் குற்றம் சாட்டினார். இதுகுறித்து உங்களின் கருத்துக்களை COMMENTSல் பதிவிடவும்.

News August 8, 2024

பெரம்பலூர் எஸ்பி அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட காவல் துறையின் தொலைத் தொடர்பு பிரிவில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலம் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 11 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் ரூ.500 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட எஸ்பி ஷ்யாமளாதேவி நேற்று அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News August 7, 2024

பெரம்பலூர் ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் 

image

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்லூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று  07.08.2024 நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

News August 7, 2024

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 34 மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 34 மனுக்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

error: Content is protected !!