Tamilnadu

News March 21, 2024

வேடசந்தூர்: மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

image

வடமதுரை இபி காலனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (64)., மனைவி கஸ்தூரிபாய் கொடைக்கானலில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் வீட்டில் இன்று காலை துர்நாற்றம் வீசியதால் அருகில் வசிப்பவர் வடமதுரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்து கிடந்த ராதாகிருஷ்ண உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2024

தெற்கு ரயில்வே பயணிகள் கவனத்திற்கு

image

சேலம் தெற்கு ரயில்வே பயணிகள் கவனத்திற்கு
மங்களூருவில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு மார்ச் 22ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2024

சேலத்தில் 99.44 டிகிரி வெயில்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (மார்ச்.21) மாவட்டத்தில் அதிகபட்சமாக 99.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News March 21, 2024

அதிமுக நகர் கழக செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு

image

மானாமதுரையை சேர்ந்த துரைப்பாண்டியின் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக அதிமுக நகர கழக செயலாளர் விஜிபோஸ் ரூ.8 லட்ச பணம் வாங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கி தராமல்  4 லட்சம் பணத்தை மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து அவதூறாக பேசி கம்பியால் தாக்கியதாக காவல் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் மீது புகார் அளித்த நிலையில் அவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 21, 2024

கள்ளக்குறிச்சி: நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

image

கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்நாரியப்பனூர் கிராமத்தில் வசிக்கும் பிச்சமுத்து பச்சையம்மாள் என்பவரது வீடு மின்கசிவினால் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தகவல் அறிந்து இன்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். இதில், அதிமுக ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உடன் இருந்தார்.

News March 21, 2024

நாகை: தேர்தல் செலவினங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

image

நாகை கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகப்பட்டினம் தேர்தல் செலவின பார்வையாளர் ஹிரிஷிகேஷ் ஹேமந்த் பட்கி , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், ஆகியோர் தலைமையில் தேர்தல் செலவினங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் ரங்ஜித் சிங், எஸ்பி ஹர் சிங் ஆகியோர் உள்ளனர்.

News March 21, 2024

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மாற்றம்

image

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் சற்றுமுன் வெளியானது. அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நைனார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், தற்போது பாஜக கூட்டனியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) கட்சிக்கு தூத்துக்குடி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

News March 21, 2024

நெல்லை பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் சற்றுமுன் வெளியானது. இந்தப்பட்டியலில் மொத்தம் 9 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில், நெல்லை தொகுதி வேட்பாளராக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் இந்த தொகுதியில் போட்டியிடுவதால், காங்கிரஸ் vs பாஜக என களம் சூடுபிடித்துள்ளது.

News March 21, 2024

விருதுநகர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அதனை ஒப்படைத்து அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். இது போன்ற நேரங்களில் துப்பாக்கியை பயன்படுத்த அனுமதி கிடையாது என்பதால் காலம் தாழ்த்தாமல் துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 21, 2024

திருச்சி: மாங்காவனம் பகுதிக்கு சுரங்கபாதை வேண்டும்

image

திருவெறும்பூர் அருகே உள்ள மேல மாங்காவனம் மற்றும் கீழ மாங்காவனம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவெறும்பூர் பகுதிக்கு வர வேண்டும் என்றால் ரயில்வே டிராக்கை கடந்து செல் வேண்டும், மக்கள் ஏதுவாக கடக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று விடுத்துள்ளனர் இதனால் பாஜக மாநகர தலைவ சுரங்கபாதை அமைத்து தர வேண்டி நேற்று ரயில்வே அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

error: Content is protected !!