India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முருகன் (21) நேற்று (மே 8) மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு ஏரிக்கரை வழியாக நடந்து சென்றார். அப்போது ஒருவர் இவரது மொபைல் போனை பறித்துக்கொண்டு ஓட முயன்றார். அவரை, மடக்கி பிடித்த முருகன் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் தொரப்பாடியைச் சேர்ந்த சரத்குமார் (24) என தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சரத்குமாரை கைதுசெய்தனர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதகை அரசு பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் ரோஜா பூங்காவில் ரோஜா மலர் கண்காட்சி ஆகியவை நாளை தொடங்கி 19ஆம் தேதிவரை நடைபெறும். இதை முன்னிட்டு நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உதகை மற்றும் சோதனைச்சாவடிகளில் 1300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தகவலை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தெரிவித்தார்.
சிவகாசி சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்து வரும் நிலையில் பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில் இஸ்லாமியர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு மோர், குளிர்பானம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பக்தர்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி ஹர்ஷ் சிங் பொதுமக்களை நேற்று சந்தித்து குறைகளை கேட்டறிந்து, 19 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். புகார் அளிக்கும் முகாமில் திருமருகல், திட்டச்சேரி, கீழ்வேளூர், திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லக்குடி புதூர் பாளையம் கிராமத்தில் சியாமளா தேவி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 5 தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.அதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 9 மணி அளவில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சியாமளாதேவி அம்மன் எழுந்தருளினார். இதைய டுத்து புதூர் பாளையம் வானதிரையான் பாளையம் ஆலம்பாக்கம் வடுகர் பேட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து வாலாஜா, கூராம்பாடி கிராமத்தில் மேய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்காக உள்ள 23 ஹெக்டேர் நிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பது குறித்து நேற்று(மே 8), வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் வருவாய்த் துறையினர் முதற் கட்ட இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.