Tamilnadu

News March 22, 2024

கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

image

கரூர், கடவூர் சீலமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பெரியசாமி. இவர் கடவூரில் அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பெரியசாமி நீரில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News March 22, 2024

செங்கல்பட்டு அருகே ஒருவர் கொலை 

image

கானத்தூர் ரெட்டிகுப்பத்தை சேர்ந்தவர் லோகநாதன்(42) யோகா மாஸ்டர். இவரை கடந்த 13ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மகன் அஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த தம்பதி சுரேஷ் (38), கஸ்துாரியை (35) விசாரித்ததில் இவர்கள் இருவரும் சேர்ந்து லோகநாதனை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரிந்தது. இருவரையும் போலீசார் நேற்று(மார்ச்.21) கைது செய்துள்ளனர். 

News March 22, 2024

81 பேர் மீது வழக்குப் பதிவு

image

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் செய்யாறு தொகுதியில் திமுக மற்றும் அதிமுக கட்சியினா் தோ்தல் விதிகளை மீறி கூட்டம் கூடி பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தி.மு.க வினர் 41 பேர்.அ.தி.மு.க 40 என மொத்தம் 81 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 22, 2024

நீலகிரி தொகுதியில் இதுவரை மனுதாக்கல் இல்லை

image

மக்களவை தேர்தல் அறிவிப்பை அடுத்து, இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன் கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கலை ஒட்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஆனால் சுயேச்சை வேட்பாளர் உட்பட அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் 2வது நாளான நேற்றும் (மார்ச் 21) மனு தாக்கல் செய்யவில்லை.

News March 22, 2024

கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்கள் பகுதி ரத்து

image

சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி சூளூர்பேட்டைக்கு பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், எண்ணூர் வழியாக தினமும் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் நாளையும், நாளை மறுநாளும் (மார்ச் 23, 24) ஆறு ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 22, 2024

கிருஷ்ணகிரி: தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

image

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணிபெண்டா பகுதியை சேர்ந்தவர் அருண் (24), மேஸ்திரி. இவருக்கு தர்ஷன் (3) என்ற குழந்தை உள்ளது. சம்பவத்தன்று காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தர்ஷன் அங்குள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாரதவிதமாக தவறிவிழுந்தது. குழந்தையை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

News March 22, 2024

பெரம்பலூர்: திமுக வேட்பாளருக்கு வரவேற்பு

image

2024 மக்களவை தேர்தலில், I.N.D.I.A கூட்டணி சார்பில் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் கே.என்.அருண் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, நேற்று சென்னையில் இருந்து திருச்சி நோக்கி காரில் பயணம் மேற்கொண்ட அருணுக்கு பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உட்பட திமுகவினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

News March 22, 2024

நள்ளிரவு 1 மணிவரை மெட்ரோ ரயில் சேவை

image

சென்னையில் இன்று(மார்ச் 22) இரவு 11 மணி முதல், அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெறும் ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு ரசிகர்கள் வீடு திரும்ப வசதியாக, இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, காலை முதலே வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு வருகிறது.

News March 22, 2024

தருமபுரி: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், வட்டுவனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதி மக்கள், மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பேனர் வைத்து இன்று(மார்ச் 22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டா கோரி பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்டு மனு கொடுத்தும், இதுவரை தங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை என தெரிவிக்கும் இம்மக்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகின்றனர்.

News March 22, 2024

சேலம்: உடனே ஒப்படைக்க உத்தரவு!

image

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை, துப்பாக்கி உரிமதாரர்கள் தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உடனே ஒப்படைக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒருவார காலத்திற்குப் பிறகு, காவல் நிலையங்களிலிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!