Tamilnadu

News May 9, 2024

விழுப்புரம் திருவக்கரை தேசிய கல்மரப் பூங்கா

image

விழுப்புரம், திருவக்கரையில் அமைந்துள்ளது தேசியக் கல்மர பூங்கா. இந்த பூங்கா இந்திய புவியியல் மையத்தால் பராமரிக்கப்படுகிறது. ஐரோப்பாவை சேர்ந்த இயற்கையியலர் சொன்னேரெட் என்பவர் முதன்முதலில் கல் மரங்கள் இருப்பு குறித்து இவ்விடத்தை 1781இல் ஆவணம் செய்தார். இங்கு இருக்கும் கல்மரங்கள் சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இங்கு இருக்கும் கல் மரங்கள் பலவும் படுக்கை நிலையில் உள்ளன.

News May 9, 2024

டிராக்டர் வழங்க கள்ளக்குறிச்சிக்கு நடிகர் லாரன்ஸ் வருகை

image

கள்ளக்குறிச்சி நல்லாத்தூர் கிராமத்தில் சேவையை கடவுள் மாற்றம் என்ற அறக்கட்டளை சார்பில் டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதில் நடிகர் லாரன்ஸ் கலந்துகொண்டு டிராக்டரை வழங்க வருகை தந்துள்ளார். அப்பொழுது லாரன்ஸ் பார்க்க இளைஞர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்

News May 9, 2024

கடலூர் அருகே விபத்து; மரணம் 

image

சிதம்பரம் அருகே கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஜோசப் நேற்று சாலா மாதா கோவில் அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது நிலை தடுமாறி அங்கிருந்த மரத்தில் மோதியது.  இதனால் படுகாயம் அடைந்தார்.அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேல் சிகிச்சைக்கு வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News May 9, 2024

கிருஷ்ணகிரி: திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கண்ணன்டஹள்ளி நான்கு ரோட்டில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் எம்எல்ஏ தே. மதியழகன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, தர்பூசணி, இளநீர், மோர், நுங்கு, வாழைப்பழம் உள்ளிட்ட பல வகைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

News May 9, 2024

தூத்துக்குடி மணப்பாடு கடற்கரை சிறப்பு

image

தூத்துக்குடியில் அமைந்துள்ளது மணவை என்றழைக்கப்படும் மணப்பாடு கடற்கரை. இந்த கடற்கரையில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலுவை உள்ளது. பழமையான கடற்கரையான இந்த இடத்தில் பண்டைய வர்த்தம் செய்யப்பட்டு வந்தது. தூத்துக்குடி துறைமுகம் கட்டப்பட்ட பிறகு வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இந்த கடற்கரைக்கு அருகில் கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயம் பழமையான தேவாலயமாகும்.

News May 9, 2024

ரூ.86.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அணை ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஏனாதிமங்கலத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.86.25 கோடி மதிப்பீட்டில் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதை முதன்மைச் செயலாளர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சஹாய் மீனா, மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் இன்று நேரில் ஆய்வுசெய்தனர்.

News May 9, 2024

ராம்நாடு: இளம்பெண் பரிதாப சாவு!

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்திநகர் பகுதியில் வசிப்பவர் கார்த்திகைராஜா, இவரது மனைவி சிந்துபிரியா (36). இவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவ்வப்போது சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயர் ரத்த அழுத்தம் அதிகமாகி மயங்கி விழுந்ததில் உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் கஸ்தூரி (62) பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 9, 2024

நெல்லை காங். தலைவர் கொலை: முக்கிய நடவடிக்கை

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு 6 தினங்கள் கடந்த நிலையில் உண்மை குற்றவாளி யார் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இந்த நிலையில் அவர் இறந்தபோது மாயமான அவரது 2 செல்போன் இருப்பிடத்தை கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தொழில் நுட்ப ரீதியான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். செல்போன் கிடைத்தால் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 9, 2024

திருப்பூர்: 8584 மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்

image

சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை கல்வி கற்ற பெண்கள் மட்டுமே உருவாக்க முடியும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. இதுவரை கல்லூரி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலமாக 8,584 மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கி பயன் பெற்று வருகின்றனர்.

News May 9, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!