India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2017ல் திசையன்விளை பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தேவபாலன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் அவரது மகன்கள் சேர்ம துரை, சுரேஷ் ஆகியோர் டிரைவர் தேவபாலனை அப்பகுதியில் உள்ள அம்மன் கோயில் ஓடையில் நேற்று (மார்ச் 22) கொடூரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். திசையன்விளை போலீசார் விசாரிக்கின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் காஞ்சிபுரம் தொகுதியில் மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், காஞ்சிபுரம் தொகுதிக்கு பா.ம.க. சார்பில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலுப்பூர் மேலப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகளுக்கு நேற்று மேலப்பட்டி அம்மன் கோவில் அருகே உள்ள சமுதாய கூடத்தில் காதணி விழா நடத்தியுள்ளார். இதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ராமர், சூர்யா, முத்துசெல்வி, பாண்டியம்மாள் ஆகிய 4 பேரும் மொய் எழுதுபவரை திசை திருப்பி பணத்தை கையாடல் செய்தனர்.இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
தமிழகத்தில் இன்று (மார்ச்.23) காலை 10 மணி வரை தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று அதிகாலை லேசான மழை பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் முகமது இம்ரான்(37)
என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளை விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று பட்டப் பகலில் கடித்துக் கொன்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை தாளவாடி வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் மக்களவை பொதுத் தேர்தல் தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலருக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். இதில் பொது தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1491 ஓட்டு சாவடிகளுக்கு 1795 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 1944 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களுக்கான கிட்டங்கி நெல்லை டவுன் தாலுகா அலுவலகத்தில் உள்ளது.நெல்லையில் உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு இணைய வழி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவு பெற்றது என ஆட்சியர் நேற்று (மார்ச் 22) தெரிவித்தார்.
சிவகங்கை மக்களவைத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை(24.03.2024) அன்று அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் இப்பயிற்சியினை திறம்பட பெற்று, தங்களுக்கான தேர்தல் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரில் சோதனை செய்தபோது அதில் 1 லட்சம் ரூபாய் பணம் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 1 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானி சாகர் மற்றும் மலை மாவட்டமான ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது நீலகிரி மக்களவை தொகுதி. தேர்தல் தலைமை அலுவலகமான மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஊட்டியில் உள்ளது. இங்கு நேற்று வரை 3 நாட்கள் ஆகியும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
Sorry, no posts matched your criteria.