India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இன்று (ஜன.1) சுமார் 60 வயது தக்க முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முதியவர் மீது மோதியது. இதில் முதியவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகிள்ளது. செங்கோட்டை விரைவு ரயில் (16848) ஜனவரி 2, 3, 4, 5, 6 ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை வழியாக இயக்கப்படும். குருவாயூா் விரைவு ரயில் (16128) ஜனவரி 1, 2, 3, 4 ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையத்தை தவிா்த்து, மானாமதுரை வழியாக இயக்கப்படும்.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இளையராஜா இன்று சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்குப் பிறகு கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கோயிலில் இருந்து வெளியே வந்த போது, அங்கிருந்த பக்தர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

மூலச்சல் பகுதி சுதாமணி (55) தனது பேரன் அபின்ராஜூடன் (19) டிச.30.ம் தேதி இரவு அருகில் உள்ள திருமணவிழாவுக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது புறத்தால்விளையை சேர்ந்த தங்கராஜ் (72) ஓட்டி வந்த பைக் அவர்கள் மீது மோதியது. தங்கராஜ் தூக்கி வீசப்பட்டார். காயமடைந்த 3பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி தங்கராஜ் இறந்து போனார். தக்கலைபோலீசார் விசாரணை நடத்தினர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார், 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தப் புத்தாண்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் ஏற்றம் தரும் ஆண்டாக அமையட்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.

ராம்நாடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் ராம்நாடு மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04322-221733 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

நெல்லை மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <

தேனி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தேனி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04546-250387 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

தென்காசி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <

விருதுநகர் மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <
Sorry, no posts matched your criteria.