India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில் பாரத நாட்டியம் , ஓவியம், துணி வண்ண ஓவியம், சுடுமண் சிற்பம் ஆகிய பிரிவுகளுக்கு 6 மாத கால சான்றிதழ் பயிற்சி மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில், சேர விரும்புவோர் பல்கலைக்கூடத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். https://bpk.py.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி சேர்ந்த மாணவி துர்கா தேவி 10 ஆம் வகுப்பு தேர்வில் 492 மதிப்பெண் எடுத்து மாவட்டத்திலே இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அவரது இல்லத்திற்கு மின்சார இணைப்பு இல்லை என்ற அறிந்தவுடன் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் மாணவி துர்காதேவி நன்றி தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் பஷீர். தனது வீட்டை புதுப்பித்து கட்டி வருகிறார். நேற்று இரவு வந்த அதிகாரிகள் இந்த இடம் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமானது இது குறித்து விளக்கம் அளிக்க நாளை அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் எனக் கூறிச் சென்றனர். ஆனால் இன்று காலை எவ்வித முன்னறிவிப்புமின்றி வீட்டை ஜேசிபி மூலம் இடித்து விட்டனர். இதுகுறித்த புகாரில் பரங்கிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடம் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக மாநில பேரிடர் மீட்புப்பட்டை தகவல் தெரிவித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை தர்மபுரியில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை சேலத்தில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
குமி மாட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து அணைகள் நிரம்பி வெள்ள பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை அனைத்து மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பதாக மாநில பேரிடர் மீட்புப்பட்டை தகவல் தெரிவித்துள்ளது.
சிவகங்கை கல்வி முதன்மை அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த சரவணன் தன் தாயார் அரசு பணியில் இருந்ததை மறைத்தும் சிறுவயதில் அவர் தன்னை கைவிட்டு சென்றதாக கூறி 1989 கருணை பணி நியமனம் பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது பணி ஒய்வு பெறும் நாளில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்ததை அடுத்து நீதிபதி ஆர்.என் மஞ்சுளா சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடம் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக மாநில பேரிடர் மீட்புப்பட்டை தகவல் தெரிவித்துள்ளது.
குமரி அறிவியல் பேரவையின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான இளம்விஞ்ஞானி விருது வழங்கும் விழா ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி அரங்கில் நாளை (18.5.24)) காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் முத்துநாயகம் இளம் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முள்ளஞ்சேரி வேலையன் தலைமையில் குமரி அறிவியல் பேரவையினர் செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.