Tamilnadu

News March 24, 2024

பாபநாசத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டது…!

image

இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவைத் தேர்தலுக்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிடங்கில் இருந்து பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குரிய மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள்
கனரக வாகனம் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் இறக்கி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

News March 24, 2024

கடலூரில் இன்று பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம்!

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் அறிமுக கூட்டம், கடலூர் வன்னியர் திருமண மண்டபத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பாமக அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொள்வதோடு கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து வேட்பாளர் அறிமுக கூட்டத்தினை சிறப்பிக்குமாறு கடலூர் மாவட்ட பாமக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

News March 24, 2024

20,000 பேர் அஞ்சல் வாக்கு அளிக்க ஏற்பாடு!

image

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுபவர்கள், பறக்கும் படையினர், மண்டல அளவிலான நுண் பார்வையாளர்கள் என தேர்தல் பணியில் ஈடுபடும் சுமார் 20,000 மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

News March 24, 2024

தென்காசியில் இந்திய கூட்டணி வேட்பாளா் காலையில் அறிமுக கூட்டம்

image

இந்தியா கூட்டணி சாா்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீகுமாா் அறிமுகக் கூட்டம் இன்று காலையில் தென்காசியில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினாா். இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவா் மாடசாமி ஜோதிடா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

News March 24, 2024

நெல்லை; நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, நெல்லையில் சத்யா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 17 வயது சிறுமிக்கு அவருடைய அக்காள் கணவர் திருவிழாவின் நேரத்தின் போது வீட்டிற்கு வந்து சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அக்காள் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 24, 2024

கிருஷ்ணகிரி: நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கிருஷ்ணகிரியில் வீரப்பனின் மகள் வித்யா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

விழுப்புரம்: முன்னாள் படை வீரர்கள் கவனத்திற்கு

image

தேர்தல் பணியில் ஈடுபட விருப்பமுள்ள விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், படைவீரர் நல உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு அசல் படைப்பணிச் சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று, தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04146-220524 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளார்.

News March 24, 2024

அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

image

மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பாபு இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் நோட்டீஸ் வழங்கி இரட்டை இலை சின்னத்தில் தங்களது வாக்கினை செலுத்துமாறு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது ஏராளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 24, 2024

வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை

image

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

error: Content is protected !!