India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு பிராமண சங்கம் ஓசூர் கிளை சார்பில் சுவா சினி பூஜை மற்றும் குத்துவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் இந்த பூஜை நடத்தப்பட்டது. மகாலட்சுமியை ஆவாஹனம் செய்து ஆரம்பித்த இந்த பூஜை கன்யா பூஜை, குத்துவிளக்கு பூஜை, சுவாசினி பூஜையுடன் இனிதே நடைபெற்றது. தாம்பிராஸ் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. ஓசூர் குகை சுவாமிகள் ஸ்ரீ சாக்தானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, சமூக ஊடகப் பேரவை (பாமக)மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று(மார்ச் 24) அவரது இல்லத்தில் நடைபெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில், அரசியல் களத்தில் ஊடகப் பேரவையின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று மாநிலப் பொறுப்பாளர்கள் செயல்திட்டங்களை வகுத்து கொடுத்தனர். இதில் ஏராளமான மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அழகர் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று காலை முதல் பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அழகர் மலை அடிவாரத்தில் இருந்து சோலைமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக சென்று முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 86 பேர் மற்றும் அவர்களின் விசை படகுகள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் சிறைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று விஜய் வசந்த் எம்பி அப்பகுதிக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களையும் அவர்களின் விசைப்படகுகளையும் மீட்டு குமரிக்கு அழைத்து வந்தார். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எம்பி நன்றி தெரிவித்தார்.
புதுச்சேரியில் வார விடுமுறை நாட்களில் சனி, ஞாயிறு கிழமைகளில் சுற்றுலா பயணிகள் நிறைய பேர் வருவது வழக்கம். ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பால் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பங்குனித் திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் இதனை எடுத்து பழனி மலைக்கோயிலின் உச்சி கோபுரத்தின் மீது நிலவு அருகே தெரிந்து ரம்மியாமாக காட்சியளித்தது இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது .இக்காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது
திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி, வேடசந்தூர், ஆத்தூர், விளாம்பட்டி, எரியோடு, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு மது விற்ற கருணாநிதி (49), பெருமாள் (47)ரவி (47), சதீஷ்குமார் (38), முருகன் (63), முருகேசன் (43), விஜயன் (56), பால்ராஜ் (36), இளையராஜா (35), மாரியப்பன் (45), சிலம்பரசன் (34), செல்வம் (61),அழகு ராஜபாண்டி (36), சேவுகன் (58) 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் போட்டியிடுகிறார். கோபியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அறிமுக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, பேசுகையில் கோவையில் அண்ணாமலை வெற்றி பெற ஒரு ரூபாய் செலவு செய்ய மாட்டார் ஆனால் ஒரு சவரன் கொடுப்பார் என தெரிவித்தார். இதில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் மிகவும் பிரசத்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி புதுக்கோட்டை, கீரனூர், குளத்தூர், அன்னவாசல், நார்த்தாமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமமக்கள் பால்குடம் காவடி எடுத்து வழிப்பட்டனர் பெண்கள் அலகுகுத்தி தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிபாடு நடத்தினர்.
குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஜெடா முனீஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் பணிகள் முழுமை அடைந்த நிலையில் இன்று யாக சாலையில் பூஜைகள் செய்யப்பட புனித கலச நீரை ஸ்ரீஜெடா முனீஸ்வரன் கோவில் விமான கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.