India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரத்தில், தனியார் திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 25) அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் கலந்துகொண்டு, வேட்பாளர் பாக்யராஜை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறிமுகம் செய்தார். பின்னர் பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உரையாற்றினார்.
கோவை, பூண்டி வெள்ளியங்கிரி மலை தரிசனத்திற்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை தேனியைச் சேர்ந்த பாண்டியன்(40) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இம்மலையில் கடந்த 24 மணி நேரத்தில் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன், ஹைதராபாத் சென்ட்ரல் பகுதியைச் சேர்ந்த சுப்பா ராவ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், திருவள்ளூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.வி. பாலகணபதி இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை தரிசனத்திற்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திரத்தை ஒட்டி இன்று அதிகாலை வெள்ளியங்கிரி யாத்திரை சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (40) மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் திமுக போட்டியிட இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளரை தேர்வுசெய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டு முடிவு எட்ட முடியாமல் அக்கட்சியினர் திணறி வருகின்றனர். இதனால் இன்று (மார்ச் 25) மாலைக்குள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிக்கவில்லை எனில் திமுக தனது வேட்பாளரை தன்னிச்சையாக அறிவிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய நெல்லை தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கே பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன் இன்று (மார்ச் 25) தனது ஆதரவாளர்களுடன் வேட்பாளரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் பாஜக, ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரிடம் ஆசி பெற்றார். இதில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவையில் போட்டியிட இன்று அல்லது நாளை மறுநாள் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா நாளை நடைபெறுவதை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை கூகுள் மேப் உதவியுடன் கண்டறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட வாகன நிற்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என கோயில் நிர்வாகத்தின் சார்பாக கூறப்பட்டுள்ளது.
மக்களவை பொதுத்தேர்தல்-2024, ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இந்நிலையில் இன்று(மார்ச் 25) தருமபுரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் அ.மணி மற்றும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை தரிசனத்திற்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திரத்தை ஒட்டி நேற்று (மார்ச்.24 ) கிரிமலை யாத்திரை சென்ற சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் உயிரிழந்தார். இதேபோல் ஹைதராபாத் சென்ட்ரல் பகுதியை சுப்பா ராவ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.