India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் கருப்பூர் அரசு பொறியல் கல்லூரியில் தேர்தல் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குழந்தைகள் நல பாதுகாப்பு துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சக காவலர்கள் (ம) அதிகாரிகள் அவரை மீட்டு 108 வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உடல் சோர்வு (ம) வயிற்றுப்போக்கின் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
குமரி மக்களவைத் தொகுதியில் வாக்கும் எண்ணும் பணி இன்று விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடித்து வருகிறது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று முடிவடைந்த நிலையில், 2ம் சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சி – 38820, தேமுதிக – 27286, பாமக -14520, நாதக – 5129 இதுவரை பெற்றுள்ளது. இதில், 11534 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார்
ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி முதல் சுற்று விவரம் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி, 26949. அதிமுக கூட்டணி- 11015, பாஜக கூட்டணி – 5291 நாதக – 5567, திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 15934 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி முதல் சுற்று விவரம் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி, 26949. அதிமுக கூட்டணி- 11015, பாஜக கூட்டணி – 5291 நாதக – 5567, திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 15934 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
நெல்லை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளில் நான்கு சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளன. அதன்படி, திமுக 56,329 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பாஜக 39,182, அதிமுக 11,979, நாம் தமிழர் 9,655 வாக்குகள் பெற்றுள்ளனர்.
திருச்சி வாக்கு எண்ணும் மையத்திற்கு இன்று வருகை தந்த மதிமுக வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தற்போது வரை தான் முன்னிலையில் இருப்பது மக்கள் என் மீதும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையாகவே பார்க்கின்றேன் என தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 4ம் சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் – 97,994, அதிமுக குமரகுரு – 85,594, பாமக தேவதாஸ் – 12,269, நாதக ஜெகதீசன் – 11,625 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் – 12,400 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாவது சுற்று நிலவரப்படி திமுக முன்னிலையில் உள்ளது. திமுக வேட்பாளர் 24,359 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் 10,329 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், பாஜக வேட்பாளர் 777,6 வாக்குகள் பெற்று 3வது இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் 6,305 வாக்குகள் பெற்று 4வது இடத்தில் உள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் முதல் சுற்று நிலவரம் வெளியாகியுள்ளது. முதல் சுற்று நிலவரப்படி, திமுக (அருண்நேரு) – 29726 வாக்குகள், அதிமுக(சந்திரமோகன்)- 10464 வாக்குகள், பாஜக- (பாரிவேந்தர்) -7927 வாக்குகள், நாதக(தேன்மொழி) – 5691 வாக்குகள் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தமாக – 55596 வாக்குகள் முதல் சுற்று நிலவரப்படி எண்ணப்பட்டுள்ளன .
Sorry, no posts matched your criteria.