India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 1998 ,1999, 2004, 2009, 2014 ,2019 ஆகிய 6 முறை தென்காசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டார். இதைத்தொடர்ந்து இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2024 மக்களவை தேர்தலில் தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போது 7ஆவது முறையான இத்தேர்தலிலும் அவர் தோல்வி அடைந்தார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 20 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் அருண் நேரு 5,79,435 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் – சந்திரமோகன் 2,05,283 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் அருண் நேரு 3,74,152 -வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கதிர் ஆனந்த் தற்போது வரை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால் கிட்டத்தட்ட அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று மாலை 5.30 மணி நேர நிலவரப்படி, 17-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் மதிமுக – துரை வைகோ – 4,62,085, அதிமுக – கருப்பையா – 1,90,053, அமமுக – செந்தில்நாதன் – 87,325, நா.த.க – ராஜேஷ் – 88,376, 2,72,032 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
எம்பி தேர்தலில் திருப்பூர் மாவட்டம் வித்தியாசமானது எனலாம். இந்த மாவட்டத்திற்கு மட்டும் 5 எம்பிக்கள் உள்ளனர். அதாவது, திருப்பூர் தெற்கு, வடக்கு – திருப்பூர் தொகுதியிலும், உடுமலை, மடத்துக்குளம் – பொள்ளாச்சி தொகுதியிலும், தாராபுரம், காங்கேயம் – ஈரோடு தொகுதியிலும், பல்லடம் – கோவை தொகுதியிலும் அவிநாசி – நீலகிரி தொகுதியிலும் அமைந்துள்ளன. எனவே, திருப்பூர் மாவட்டத்திலிருந்து 5 எம்பிக்கள் செல்கின்றனர்.
வேலூர் தொகுதியில் 14 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 434,158 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 260,844 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 81,658 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். 14 சுற்று முடிவில் 173,314 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
ஈரோடு மக்களவை தொகுதியில் 7வது சுற்று முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 1,92,108 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 1,17,416 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளனர். நாதக வேட்பாளர் கார்மேகம் 29, 951 வாக்குகள் பெற்றுள்ளார். நடந்து முடிந்த 7 சுற்றுகளில் பிரகாஷ் 74,692 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 21 ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -4,50401, தேமுதிக -2,67707, பாமக -2,02372.1,82694 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை
2024 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 3,12,886வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் 2,22,332 வாக்குகளும் பெற்றுள்ளனர். புதுச்சேரியில் காங், வெற்றி வாய்ப்பை தட்டிச் சென்றது.
தென்காசி பாராளுமன்ற தொகுதி 18 ஆவது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 370882, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 197506, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 175488, இசை.மதிவாணன் (நா.த.க) – 109993 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 173376 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.