India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஜே பி பிரகாஷ் இன்று (மார்ச்.25) அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியான தேமுதிகவினர் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தலுக்கான விழிப்புணர்வு பாடலுக்கான குறுந்தகட்டை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் இன்று பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் வினோஜ் பி. செல்வம் இன்று பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று
கல்லூரி மாணவிகள் சுரண்டை காமராஜர் கல்லூரி அபிதா பெல்சியா, ஆலங்குளம் அரசு கல்லூரி சன்மதி, கடையநல்லூர் அரசு கல்லூரி பேச்சியம்மாள் ஆகியோருக்கு விழிப்புணர்வு தூதுவர்களுக்கான ஆணையை கலெக்டர் கமல் கிஷோர் வழங்கினார்.
18 ஆவது நாடாளுமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மூன்று மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து புகார்கள், சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு பொதுமக்கள் 1950 வை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும்,
மாநகராட்சி உதவி எண் 1913 யையும் தொடர்பு கொள்ளலாம்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (மார்ச். 25) மாவட்டத்தில் அதிகபட்சமாக 101.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
மதுரையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 6 இளம்பெண்கள் நேற்று ஒரே நாளில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளிக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவி நாகரத்தினம் 17, திருப்பாலையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரேஷ்மா 18, ஒத்தக்கடையை சேர்ந்த கல்லூரி மாணவி அபிநயா 18, மேலூரை சேர்ந்த மகாலட்சுமி 23, உள்ளிட்ட 6 பேர் மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் இன்று நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் ஆகியோருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் படை சூழ கலந்து கொண்டனர். திருமயம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிகள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் வேட்பாளர் பிஷப் காட்பிரி நோபல் என்ற பாதிரியார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தர். அப்போது அவரது ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.