India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சத்தியமங்கலம் தாலுகா அலுவலக மாடியில் தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பவானிசாகர் தொகுதி தேர்தல் அலுவலர் உமாசங்கர், தாசில்தார் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரான கனிமொழி எம்பி ஆறுமுகநேரி பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அடைக்கலாபுரம், காமராஜபுரம், ராணிமகாராஜபுரம் , பெருமாள்புரம், செல்வராஜபுரம், மடத்துவிளை உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார். அவருடன் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் தொகுதி வி.சி.க. மாவட்டசெயலாளர் டிலைட்டா உள்ளிட்டோர் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 98 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருக்கிறது. இதன் அளவு டிகிரி செல்சியஸில் 36.6 டிகிரி செல்சியஸ் ஆகும். சுட்டெரித்த வெயிலின் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிக்குள்ளாகினர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திண்டுக்கல் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் இன்று 25.03.2024- கொடைக்கானல் பளியர் பழங்குடி சமூகத்திற்கு S T சான்று கிடைப்பதற்கு ஒன்றிய அரசுடன் போராடுவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யவ ந்தார் . அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது, இரட்டை இலையை காண்பித்து ஓட்டு வாங்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. மக்கள் அனுதினமும் மக்களுக்கு யார் நல்லாட்சி செய்கிறார் என்பதை தெரிந்துகொள்கின்றனர் என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரவிச்சந்திரன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்-25) வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரேம்குமார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்-25) வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்யும் போது முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உட்கோட்டத்தில் உள்ள மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் இன்று மாலை 4 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜான் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால் தனது அமைச்சர் பதவி, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அலங்காநல்லூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி கட்சிக்கு துரோகம் செய்யாமல் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றது . காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நியமிப்பதில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இன்று (மார்ச் 25) ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தற்பொழுது அவர் மீது 10 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.