India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரான்சில் இயங்கி வரும் திருவள்ளுவர் கலைக்கூடத்தில் வரும் ஏப். 13 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக மாமல்லபுரம், வடகடம்பாடி தனியார் சிற்பக்கூடத்தில் உலோக சிற்ப பிரிவின் ஓய்வு பெற்ற விரிவுரையாளர் ராஜேந்திரன் வடிவமைத்த 200 கிலோ எடை கொண்ட 4 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் வெண்கல சிலை நேற்று பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து தனியார் தொலைக்காட்சியின் பிரச்சார பயண விழிப்புணர்வு வாகனத்தினை இன்று (மார்ச் 26) திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் கா.ப கார்த்திகேயன் தொடங்கிவைத்தார். மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பு பலத்த சத்தம் கேட்ட நிலையில் இந்த சத்தம் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் வரை உள்ள கிராமத்திற்கு சட்டம் கேட்ட நிலையில் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த அதிர்வை கண்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாமா என அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் வெளியேறி உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் சிலால் 4 ரோட்டில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா தொடங்கி வைத்தார். 3 கி.மீ தொலைவில் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கம்பம் லோயர்கேம்ப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (மார்.25) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில் கேரளா பகுதியை சேர்ந்த நபரிடம் ரூ.2 லட்சமும், கோட்டயம் பகுதியைச் சேர்ந்த நபரிடம் ரூ.1 லட்சமும் உரிய ஆவணங்களின்றி இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பணத்தினை சார் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சியை அடுத்த ஜீயபுரத்தை சேர்ந்த வீரபத்திரன். இவர் நேற்று முன்தினம் பேரூர் பஸ் நிலையம் அருகே நின்றிருந்தபோது மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினர். இதையடுத்து நேற்று மாலை வீரபத்திரன் உடல் உடற்கூராய்வு முடிந்த பிறகு அவர்களது உறவினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஜீயபுரம் போலிசார் வழக்கு பதிந்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்கியது. திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று திடீரென சென்று ஆய்வு செய்தார். தேர்வு எழுதும் மாணவர் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் குறித்து தேர்வு மையப் பொறுப்பாளர்களிடம் விசாரித்தார்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவன காந்தியவாதி ரமேஷ் போட்டியிடுகிறார். தனது தேர்தல் செலவுக்கு தன்னால் முடிந்ததை செலவு செய்து வருவதாகவும் தேர்தலுக்கு கூடுதலாக பணம் தேவைப்படுவதால் பொது மக்களாகிய நீங்கள் என் தேர்தல் செலவுக்கு பணம் தர கோரியுள்ளார். இதற்காக தனது கூகுள் பே 9994176591 எண்ணையும் சமுக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார் தற்போது இது பேச்சு பொருளாகி உள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் துறையில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வரும் மாணவி மீனா. இந்த மாணவி அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் காசி விஸ்வநாதர் கோயிலில் சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளார். இந்த மாணவிக்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள், கல்வெட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் சமூகத்தினரிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வாசகங்கள் பதிவு செய்தாலும், கருத்து தெரிவித்தாலும், பகிர்ந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா இன்று அறிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.