India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூரில் அருண் நேரு வெற்றி பெற்றதை அடுத்து (ஜூன் 5) நேற்று நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் K.N. நேரு, திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தார். மேலும், “பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி வருவது உறுதியாகிவிட்டது. இடம் பார்த்து தேர்வு செய்தவுடன் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். ரயில் போக்குவரத்து மற்ற திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 15,764 ஓட்டு வித்தியாசத்தில் தேமுதிகவை வென்றார். இதேபோல் 2019 ஆம் ஆண்டு 1,54,554 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளரை வென்றார். இந்த நிலையில் இந்த ஆண்டு 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை வென்றார். இதன் மூலம் 2009,2019,2024 என மூன்று முறை காங்கிரஸிடம் தேமுதிக தோற்றுள்ளது.
விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு கோட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் கோபால் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால் 3500 க்கும் அதிகமான பணியிடங்கள் ஒழிக்கப்படும், சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்கத்தை பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 12 புகார் மனுக்களும் காவலர்களிடமிருந்து 16 மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
புதுவை அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவரது அமைச்சர் பதவியை பறிக்கவும், மற்றொரு அமைச்சரின் இலாகாவை மாற்றவும் ரங்கசாமி முடிவு செய்துள்ளார். இதுபோன்று பாஜகவிலும் அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற முடிவு செய்துள்ளார். புதிதாக பொறுப்பேற்று உள்ள திருமுருகனுக்கு இலாகா வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
காரைக்காலில் புதுச்சேரி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் இருந்து தேர்தல் அதிகாரி மணிகண்டன் முன்னிலையில் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல்துறை பாதுகாப்புடன் ஆட்சியரகம் அருகே அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
அக்.1-2022க்கு பின் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு 2024ம் ஆண்டிற்கான “ஜீவன் ரக்ஷா பதக்” விருது வழங்கப்படுகிறது. www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை நாகர்கோவில் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஜூன் 29க்குள் ஒப்படைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04652 262060 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருமங்கலத்தில் 7 செ.மீட்டரும், கள்ளந்திரியில் 5 செ.மீட்டரும், தள்ளாகுலம், புலிப்பட்டி, சித்தம்பட்டி ஆகிய பகுதியில் 3 செ.மீட்டரும் பெரியபட்டி, சாத்தியார், மேட்டுப்பட்டி, மதுரை வி.நி, மதுரை நகரம் மற்றும் வடக்கு ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பாலக்கோடு ARG, பாலக்கோடு ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும், மரத்தஹள்ளியில் 4 செ.மீட்டரும், ஹரூர், பென்னாகரம் பகுதியில் 3 செ.மீட்டரும், தர்மபுரி PTO பகுதியில் 2 செ.மீட்டரும், தர்மபுரி நகரம் ப்குதியில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பரங்கிப்பேட்டையில் 7 செ.மீட்டரும், பெலாந்துறை, விருதாச்சலம் ஆகிய பகுதிகளில் 6 செ.மீட்டரும், குப்பணதம், கோதைச்சேரி ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும், வடக்குத்து, சேது தோப்பு, புவனகிரி, செய்வேலி ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
Sorry, no posts matched your criteria.